Sunday, April 12, 2015

மகாவீரர் வட நாட்டில் பிறந்தவர் எப்படி சான்றோர் குல நாடார் சமுகம் என்று சொல்ல முடியும் என்று சிலர்க்கு சந்தேகம் வரலாம். சந்தேகத்தை தீர்க்கும் விதமாக இங்கே சில ஆதாரங்களை எழுத வேண்டியிருக்கிறது.
தூத்துக்குடி யும் சமண மதமும் கன்னியாகுமரியும் சமண மதமும் சிவகங்கை மாவட்டமும் உள்ளே படிங்க புரியும்.
தமிழ் மன்னர்கள்(சேர சோழ பாண்டிய நாடார்கள் ) கிறிஸ்து பிறக்கும் காலம் முன்பே வட நாடுகள் வரை தங்கள் ஆட்சியை நிறுவியிருந்தனர் இது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். தமிழ்மன்னர்கள் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்பே காதில் தடையம்(புரியும்படி சொல்லவேண்டுமென்றால் கடுக்கன் அல்லது கம்மல் ) அணிந்திருந்தனர். நம்முடைய பாட்டிகள் அணிந்திருக்கும் பெரிய கம்மல் அதாவது தடையம் அல்லது காது வடித்தல் போல பழைய காலத்தில் கிறிஸ்து பிறக்கும் காலத்திருக்கு முன்பே நாட்டை ஆளும் குலத்தை சேர்ந்த மன்னர் குல ஆண்களும் இந்த காது வடிக்கும் முறையை பின் பற்றியிருந்தனர்..


சமண மதத்தை உருவாக்கிய மகாவீரர் காதுகளையும் காது வடித்தல் செய்திருப்பார்.புகை படம் இணைத்திருக்கிறேன் பாருங்கள். நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்கள் அனைவரும் காது வடிப்பு செய்திருந்தனர்.
ஏன் இதை சொல்கிறேன் என்றால் சமண மதம் தோற்றுவித்த மகாவீரரின் முன்னோர்கள் தமிழகத்தில் இருந்து வடக்கே ஒரிசாவில் சென்று ஆட்சி செய்த சான்றோர் குல மன்னர்கள் ஆவார்.
ஆகவே தான் ராஜா குடும்பத்தில் பிறந்த மகாவீரரும் காதுகளை வடித்திருப்பார். நாட்டையும் ஆட்சியையும் துறந்து சமண மத கொள்கைகளை பரப்ப சென்றார்..அதுவே சமண மதமாக மாறியது.
ஆகவே தான் மகாவீரர் போலவே சமண மதத்தினரும்
தங்கள் காதுகளை வடித்திருந்தனர் .
சமண முனிவர்கள் தங்களுடைய காதினை வடிகாதாகத் தொங்க விட்டுக் கொண்டனர். என்பதை சமணர்மலை, நாகமலை, கழுகுமலை, திருப்பரங்குன்றம்,ஆனைமலை, அழகர்மலை, ஆறுநாட்டான்மலை,சித்தன்னவாசல்,ஆகியவற்றில் காணப்படும் புடைச்சிற்பங்கள்,தூண் சிற்பங்கள், எழில்மிகு ஓவியங்கள் மூலம் அறியலாம். தங்களுடைய காதினை வடித்துக் கொண்டது நம்பிக்கை வயப்பட்ட பண்பாட்டுக் கூறாகக் கருதலாம். வடிகாது வழக்காறு தமிழரின் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றாக இருந்தது என்பதற்கு அடிப்படையாக பல்லவர் குடைவரைப் படைப்புக்களில் முதன்மையான மாமல்லபுரத்திலும், பாண்டியரின் குடைவரைப் படைப்புக்களில் கழுகுமலையிலும், சோழரின் கலைப்படைப்புக்களில் வடிகாது வடிவங்கள் தஞ்சையிலும் நிறைந்துள்ளன. மேலும், தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் காணப்பெறும் சிலைகள், கோபுரங்கள்,தூண் சிற்பங்கள்,ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் பல்வேறு காலங்களில் ஆட்சி செய்தவர்களுடைய காலங்களிலும் வடிகாது என்பது தொடர்ந்து வரும் கூறாக காட்சி தருகின்றன. .
.
காதில் அணியும் அணிகலன்கள் பல்வேறு பெயரிட்டு அழைக்கப் பெற்றன. தோடு என்ற அணிகலன் காதுடன் இணைக்கப் பெற்று ஒட்டியிருக்கும்.தோட்டிலிருந்து தொங்கும் நகை தொங்கட்டான் எனப்படும். ஒட்டு,ஓலை, சின்னப்பூ,கொட்பூ, கன்னப்பூ, குழை [3], கம்பி,வல்லிகை, குணுக்கு,தருப்பு,கடுக்கண், மகரி,வீரசன்னம், திரிசரி,பஞ்சரி, நவசரி, நவகண்டி,அட்டிகை, கடிப்பினை, தண்டட்டி, குண்டலம்,கொப்பு,புகடி, முருகு, செவிப்பூ, மடல், சன்னாவதஞ்சம்,பாம்பணி,நாகபடம்,பாம்படம்,குதம்பை, நீலக்குதம்பை, சந்திரபாணி, குரடு,செவியீடு என்பனவாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில்,பெருமாளின் நவத் திருப்பதிகள் பல்வேறு சிறப்பியல்புகளுடன் அமைந்துள்ளன.அவற்றுள் தென்திருப்பேரை [3] மூலவர் மகரத்தை [மீனை] அணிகலனாக குழையாக [4] தனது வடிகாதில் அணிந்து கொண்டதால்,மகரநெடுங்குழைக்காதர் என்று அழைக்கப்படுகின்றார்.
பெண்களும் மகரக்குழையை [5] அணிந்தனர் என்று ஒட்டக்கூத்தர் கூறுகின்றார்.
தெய்வங்கள்,உயர் நிலையில் மற்றவர்களால் வழிபடத்தக்க இடத்தில் வாழ்ந்தோர் மட்டுமின்றி எளிய மக்களும் நாகரீகத்தின் வெளிப்பாடாகக் காது வடித்தலைக் கொண்டிருந்தனர்.
பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தங்களுடைய காதுகளை வடித்துக் கொண்டு அழகுபடுத்திக் கொண்டனர் அதற்குச் சான்றாக முற்கால ஓவியங்களும்,சிற்பங்களும் உள்ளன.
பொற்பூ
காதிலணியும் அணிகலன் பொற் கன்னப்பூ என்றும்,மற்றுமொரு அணிகலன் நாறைக்கண்பட்டி என்றும் அழைக்கப்பட்டது. வளைய வடிவில் இருபகுதிகளாகச் செய்யப்பட்டு திருகாணி மூலம் பொருத்துவது தாழக்கூட்டுக்கம்பி ஆகும். சோழர் காலத்தில் முத்து பதிக்கப்பட்ட காதணி வடுகவாலி எனப்பட்டது. அது வட்டவடிவில் அமைந்ததாகும். வட்டவடிவ வாலி மக்களால் இரட்டை வாலி [7] என்றும் அழைக்கப்படுகிறது.
பூடி
மேற்காதில் அழகுற பூவடிவத்தில் அணிவது கொட்பூ எனப்பட்டது. திருகாணியோடு இருக்கும். கொட்பூ “ பூடி “ என்று தூத்துக்குடி வட்டாரத்தில் அழைக்கப்படுகின்றது. நீலக்கல் மற்றும் முத்து பதிக்கப்பட்ட காதணி “முத்தின் சிடுக்கு”எனப்படும்.[8]. இப்பகுதியில் நீலக்கல் மற்றும் முத்து பதிக்கப்பட்ட காதணி “கடுக்கண்” என்று கூறப்படுகிறது. “சிடுக்கு” “கடுக்கனாக”திரிபடைந்துள்ளது.
நாகரிக வளர்ச்சி
நாகரிக வளர்ச்சி , மக்களின் தகவல் தொடர்பு மேம்பாடு இவற்றால் இந்நாளில் காதுவடிக்கும் வழக்காறு நின்று போயிற்று. முன்னரே காது வடித்தவர்கள் மருத்துவ அறுவைச் சிகிச்சை மூலம் வடிகாதை அகற்றி ஒட்டவைத்துள்ளனர்.
துறவிகளான சமணர்கள் தங்களுடைய வடிகாதில் அணிகலன் அணியாததைப் போல தூத்துக்குடி மாவட்டத்தில் கணவரை இழந்தவர்கள் [ நாடார் சமுதாயத்தினர் ] வடிகாதில் அணிகலன் அணியாது வெள்ளை ஆடை அணிந்து இருந்தது, ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் பண்பாட்டுக் கூறாகும்.
சமண மதம் தமிழகத்தில் ஏன் பரவியது என்றால் சமண மதத்தை உருவாக்கிய மகாவீரர் தமிழ்மன்னர்கள் (சான்றோர் குல நாடார்கள் ) இனத்தை சார்ந்தவர் என்பதே.
இவரின் காலம் கி.மு. 534 - கி.மு. 462
இன்றைய பீகார் மாநிலத்தில் வைசாலி நகருக்கு அருகிலுள்ள குந்தக்கிராமம் என்னும் ஊரில் பிறந்தார்.
இவரது தந்தையார் பெயர் சித்தார்த்தர்; தாயின் பெயர் திரிசலை.
மனைவி பெயர் யசோதா; அனோஜா பிரியதர்சனா என்ற மகளும் இருந்தனர்.
இல்வாழ்க்கையை துறந்தது 30ஆம் வயதில்.
தியானத்தில் ஆழ்ந்த வருடங்கள் மொத்தம் 12.
வெற்றியாளர் என்பதைக் குறிக்கும் ஜீனர் என்ற சொல்லால் அழைக்கப்பட்டார்.
மக்கள் அவரை ‘மகாவீரர்’ என்று அழைத்தனர்.
வர்த்தமானர் போதித்த மும்மணிகள் ; நல்லறிவு, நன்னம்பிக்கை, நன்னடத்தை.சமண சமயத்தைப் பின்பற்றி அரசர்கள்; சந்திரகுப்த மௌரியர், கலிங்கத்துக் காரவேலன், கூன் பாண்டியன், முதலாம் மகேந்திரவர்ம பல்லவர்.
சமணர்களின் தமிழ் இலக்கிய, இலக்கணப் படைப்புகள் ; சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, சூளாமணி முதலிய காப்பியங்கள் மற்றும் யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலவிருத்தி, நேமிநாதம், நன்னூல், அகப்பொருள் விளக்கம், இலக்கண விளக்கம் போன்ற இலக்கண நூல்களையும், நிகண்டுகளையும், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, திணைமாலை நூற்றைம்பது முதலிய அற நூல்களையும் இயற்றியவர்கள் சமணர்கள்.
சமணக் கட்டடக் கலை: ராஜஸ்தான் -மவுண்ட் அபு, தில்வாரா கோயில். கஜுராஹோ, சித்தூர், ரனக்பூர் - சமணர் கோயில்.
சமணர்களின் புனித நூல்கள் - அங்கங்கள், பூர்வங்கள்.
இவரது தந்தையார் சித்தார்த்தரால் மகாவீரர் பற்றி எழுத பட்ட கல்வெட்டில் மகாவீரர் சந்திரகுல நாடா புத்திரன் என்று பிராமி மொழியில் பதிய பட்டுள்ளது ." இதை " nadar history " என்ற புத்தகத்தில் 198 ம் பக்கத்தில் டாக்டர் இம்மானுவேல் பதிவு செய்துள்ளார்..இதன் மூலம் நம் குல அரசர்கள் வாட நாட்டையும் ஆட்சி செய்தனர் என்பது அறியமுடிகிறது. இன்னும் வாசிக்க படாமல் பல்வேறு கல்வெட்டுக்களும் இருக்கின்றன ஒரிசாவில். நம் நாடார் குலத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் குறைவு. இன்னும் நிறைய வரலாற்று ஆய்வாளர்களை உருவாக்கினால் நம்முடைய பல அற்புத வரலாறுகளை உருவாக்க வசதியாக இருக்கும்.......
மகாவீரரால் தோற்றுவிக்கப்பட்ட சமண மதம் பரப்ப கி.மு.1 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சமண மதத்தை பரப்புவதற்காக தமிழ்நாட்டிற்கு சமண தீர்த்தங்கரர்கள் வந்தனர். தமிழ் நாட்டில் பல இடங்களில் படுக்கைகளை அமைத்தனர் . 2000 ம் ஆண்டுகளுக்கு முன்பு படுக்கை என்றால் கல் கொண்டு அமைக்க படும் தங்குமிடம் என்பது பொருள் ஆகும். பத்து என்றால் இடம் என்பது பொருள் ஆகும்.. இங்குதான் சமணர்கள் தங்கி தங்கள் மதங்களை பரப்பினர்.பொதுவாக சமணர்கள் நிர்வாணமாக இருப்பர் அதனால் ஊருக்கு ஒதுக்கு புறமுள்ள மலைக்குன்றுகளில் படுக்கைகள் அமைத்து தங்குவர்.இரவு நேரம் தங்கி ஓய்வெடுத்து காலை பொழுதில் ஊருக்குள் சென்று தங்கள் மதத்தை பரப்புவர்.இவர்களுக்கான சமண படுக்கைகளை அங்குள்ள அரசர்கலோ அல்லது வணிகர்களோ அமைத்து கொடுப்பார்கள் .
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள "படுக்கபத்து" "மானாடுதண்டுபத்து" " செட்டியாபத்து" "பள்ளிப்பத்து" போன்ற இடங்கள் சமண மதத்தை பரப்பிய சமணர்கள் தங்கிய இடம் ஆகும்..இதை ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டவர் நாடார் குலத்தை சார்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் டாக்டர் தவசி முத்து மாறன் நாடார் ஆவார்.
மார்த்தாண்டத்தில் மகாவீரருக்கு மலை உச்சியில் கட்ட பட்ட அருமையான மலை கோவில். உள்ளது .மார்த்தாண்டத்திலிருந்து மலைகோவில் என்ற பெயரில் பஸ் வசதி உள்ளது. குறிப்பிட தக்கது.இங்கே அந்த காலத்தில் ரொம்ப கோலாகலமா ஆண்டு விழா மற்றும் டெய்லி 2 நேரம் பூஜை நடக்கும்... அப்புறம் மலைக்கு கீழே இருக்குற சர்ச் க்கு தொந்தரவா இருக்குதுண்ணு கம்ப்ளெண்ட் பண்ணி போலீஸ் வந்து ரேடியோ வைத்திருந்த பில்லர ஐயும்... முத்து குடையை யும் அடித்து உடைத்து விட்டார்கள்... அதன் பின் ரொம்ப வருடங்கள் கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருந்ததால் பூஜை பண்ணமுடியாத நிலை... அதன் பிறகு மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணனின் முயர்ச்சியால் பலகோடி ரூபா ஒதுக்கபட்டு இப்போது சுற்றுலா தலமாக்க பட்டுள்ளது... Under care of central government of india.. தகவல் NS RAM RAM ஊர் marthandam .
இதெ போல்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்றக்குடி ஊரில் உள்ள முருகன் கோவிலின் மேற்கு பகுதியில் சமணர்கள் வாழ்ந்ததர்க்கான தடயங்கள் உள்ளன.இங்கு நான்கு சமணர்கள் தங்குவதற்கான சமணபடுக்கைகள் உள்ளன.அப்படி இந்த படுக்கையை ஆதன் சாத்தன் என்ற வணிகன் அமைத்து கொடுத்ததாக இங்கு உள்ள பிராமி கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்த கல்வெட்டானது மிர்ரர் (கண்ணாடிஎழுத்துக்களை பார்க்கும் முறை )முறையில் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பு. தகவல் (Ezhilarasan - Archaeologist)
ஹாத்திகும்பா கல்வெட்டு அல்லது அத்திக்கும்பா கல்வெட்டு (Hathigumpha inscription, "யானைக்குகை" கல்வெட்டு) என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலர் என்பவரால் கிமு இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். தமிழில் இது பெரும்பாலும் அத்திக்கும்பா கல்வெட்டு என வழங்கப்படுகிறது. பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட அத்திக்கும்பா கல்வெட்டு ஒரிசா மாநிலத்தில் புவனேசுவரம் நகரத்திற்கு மேற்கில் உள்ள உதயகிரி-கண்டகிரி இரட்டைமலைகளில் உதயகிரியின் தென்புறத்தில் உள்ள ஒரு குகையில் குடைந்த சமணக் குடைவரைக் கோவிலில் உள்ளது. இது ஆறு மைல்கள் தள்ளித் தௌலியில் உள்ள அசோக மாமன்னரின் கல்வெட்டுகளுக்கு நேர் எதிரில் உள்ளது.
இந்தக் கல்வெட்டு பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் இருப்பதும் அதன் தொன்மையை கி.மு. 150க்கு நெருங்கிய காலம் என்று கணிக்கத் துணைபுரிகிறது.[1]
இந்தக் கல்வெட்டின் காலம் மௌரிய மன்னர்களின் ஆட்சி தொடங்கிய 165 ஆம் ஆண்டு என்றும், காரவேலர் மன்னரின் 13ம் ஆட்சியாண்டு என்றும் கணிப்பதால் சந்திரகுப்த மௌரிய மன்னர் முடி சூட்டிக் கொண்ட ஆண்டாகக் கருதப்படும் கி.மு. 321 ஐக் கணக்கில் எடுத்துக் கொண்டால், காரவேலர் அரியணை ஏறிய காலத்தைக் கி.மு. 170 என்றும், யவன மன்னர் திமெத்ரியசுவுடன் நடந்த போரைக் கி.மு. 162 என்றும் கணிக்க முடிகிறது. இன்னும் இந்த கல்வெட்டில்
இந்தக் கல்வெட்டில் தமிழ் மூவேந்தர்கள்(நாடார்கள் ) கூட்டணி பற்றியும், பாண்டியர்களின் பெருஞ்செல்வத்தைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. தமிழக வரலாற்றிலும் சிலப்பதிகாரத்திலும் சேரன் செங்குட்டுவனின் நட்பரசராகக் குறிப்பிடப்படும் நூற்றுவர் கன்னர்[15] என்ற சாதவாகன அரசன் முதலாம் சதகர்ணியைத் தோற்கடித்ததாகச் சொல்லும் குறிப்பும், இவர் சமகாலத்து வடபுலத்து அரசர்கள்பற்றிய குறிப்புகளும், தமிழக வரலாற்றின் கால வரிசையைக் கணக்கிடத் துணை புரிகிறது.
கலிங்கத்தின் காரவேலரின் காலத்தைச் சாதவாகன மன்னரான முதலாம் சாதகர்ணி என்னும் நூற்றுவர் கன்னரோடும், மௌரியப் பேரரசின் வீழ்ச்சியோடும் பொருத்த முடிகிறது. அவர் 1300 அல்லது 113 ஆண்டுகளாகத் தொடர்ந்து வடபுலத்துக்கு எதிராக இருந்த தமிர தேக சங்காத்தம் என்பதை முறியடித்தேன் என்று சொல்லிக் கொள்கிறார். இந்தத் தமிர தேக சாங்காத்தம் என்பதே தமிழ் அரசர்களின் கூட்டணியென ஆய்வாளர்களால் கருதப்படுவதால் தமிழ் அரசர்களின் வரலாறு பற்றியும் அவர்கள் தொன்மை பற்றியும் சில வரலாற்றுக் குறிப்புகள் இதில் கிடைப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தமிழரசர்கள் கூட்டணியை முறியடித்ததோடு மட்டுமல்லாமல் மதுரைப் பாண்டியர்களிடமிருந்து பெருஞ்செல்வத்தைக் கொண்டு வந்ததாகக் கல்வெட்டில் இருப்பதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
இந்தக் கல்வெட்டில் 1300 ஆண்டுகளாகத் தம் கொற்றத்துக்கு இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருந்த தமிர தேக சங்காத்தம் அல்லது தமிழ் மூவேந்தர் கூட்டணியை உடைத்ததாகப் பெருமைக் கொள்கிறார் மன்னர் காரவேலர். இந்தக் கூட்டணி எத்தனை காலம் நீடித்தது என்பதில் கருத்து வேறுகள் இருந்தாலும் அசோகர் கல்வெட்டுகள் குறிப்பிடும் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களோடு சத்தியபுத்திரர் அல்லது அதியமான் என்னும் அரசர்களையும் சேர்த்துக் கொண்டால் ஒரு தமிழரசர் கூட்டணி தமிழக எல்லைக்கு அப்பால் அரண் அமைத்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. ”தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” என்று மாமூலனார் குறிப்பிடுவது (அகநானூறு 31), பண்டையத் தமிழகத்தின் வேங்கட மலை வடக்கே, மொழிபெயர்த் தேயம் அல்லது தமிழ் மொழி மயங்கி வேறு மொழிகள் புழங்கத் தொடங்கும் நிலம் தமிழ் மூவேந்தர் கட்டுப்பாட்டில் இருந்திருக்கலாம் என்ற கருத்துக்கு அடிகோலுகிறது.[16] தமிர தேச சங்காத்தம் அல்லது தமிழ் மூவேந்தர் உடன்பாடு என்று இந்தக் கல்வெட்டு குறிப்பிடுவது மாமூலனாரின் கூற்றோடு இசைந்து வருவது நோக்கத்தக்கது.
தமிழ் மூவேந்தர் கூட்டணியை (தமிர தேச சங்காத்தம்) உடைத்தேன் என்றும் பாண்டிய மன்னர்களிடமிருந்து பெரும்பொருளைப் பெற்றேன் என்றும் இந்தக் கல்வெட்டில் காரவேலர் பெருமைப்பட்டிருந்தாலும், பொதுவாகத் தென்னக மன்னர்கள் இவரிடம் நட்பு பாராட்டினார்கள் என்று ஜெயசுவால் கருதினார். தமிழ் மூவேந்தர்களில் வலிமை மிக்கவர்களும் செல்வந்தர்களுமான பாண்டியர்கள் காரவேலருக்குக் கொடுத்த செல்வங்களை நட்பு பாராட்டி அன்பளிப்பாக அனுப்பியது என்று அவர் கருதினார்.[17] இதற்கு நேர் மாறாக, மூவேந்தர் கூட்டணியைப் பேச்சுவார்த்தைமூலம் காரவேலர் உடைத்திருக்க வேண்டும் என்னும் சசிகாந்து, அதற்குப் பின்னர் பாண்டியர்மீது தரைப்படை, கடற்படை என்று இரண்டின் மூலமும் தாக்கிப் பெருஞ்செல்வத்தைக் கவர்ந்து வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்.[18].
பல நூறு ஆண்டுகளாய்க் கலிங்கத்துக்குத் தொல்லையாக இருந்த தமிழ் மூவேந்தர் கூட்டணியை உடைத்தேன் என்று சொல்லும் காரவேலர், மகத நாட்டையும் கலிங்கத்தின் அருகில் இருந்த அரசுகளையும் தோற்கடித்ததைக் காட்டிலும் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைத்தான் “அற்புதம் ஆச்சரியம்” என்று கொண்டாடுகிறார். சோழநாட்டைக் கடந்துதான் பாண்டிய நாட்டின்மீது படையெடுக்க முடியும் என்றாலும், சோழநாட்டின்மீது படையெடுத்ததாகக் குறிப்பிடாமல் பாண்டியர்மீது வெற்றி கொண்டு பெருஞ்செல்வத்தைத் திறையாகப் பெற்றது பற்றிச் சொல்வதால் தமிழ் மூவேந்தர் கூட்டணியை இவர் (சோழர்களோடு செய்த) ஒப்பந்தங்களால் உடைத்திருக்க வேண்டும்.[19]
பாண்டியர்கள் இவர் காலத்தில் அணிகலன்கள், முத்து, மாணிக்கம், வைடூரியங்கள் என்று பெருஞ்செல்வத்தைக் கொண்டிருக்கும் வல்லமையுள்ள அரசாகத் திகழ்ந்திருக்கிறார்கள். தென்னகத்தில் மாணிக்க, வைடூரியச் சுரங்கங்கள் இல்லை என்பதால் இவை ஈழம், பர்மா அல்லது பாரசீக நாடுகளிலிருந்து வந்திருக்கலாம். பாண்டியர்களின் குதிரைகளையும் பற்றிக் கல்வெட்டு குறிப்பிடுவதால் மாணிக்கம், வைடூரியங்கள் மட்டுமல்லாமல் குதிரைகளையும் பாண்டியர்கள் கடல்வழி வாணிகத்தில் இறக்குமதி செய்திருக்க வேண்டும்.
நன்றாக ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் சமணர்கள் தொழில் வணிகம், தமிழ் மன்னர்கள் குலத்தை சார்ந்தவர்கள் மட்டுமே வணிகம் செய்தனர். இன்று தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் வணிகம் செய்வது நாடார்களே .இன்றைய தமிழக அரசிற்கு வணிகம் மூலம் பெருமளவு செல்வத்தை ஈட்டி கொடுப்பவர்கள் நாடார்கள் தான். வணிகம் செய்தது அரசாங்க குலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்றும் வணிகம் நாடார்கள் ரத்ததிலே கலந்திருக்க காரணமும் இது தான் . நாடார்கள் அரச குலம் என்பதை இன்று பல்வேறு துறைகளில் பெற்ற வெற்றிகள் மூலம் நிருபித்து கொண்டிருக்கின்றோம்.
தமிழ்மன்னர்களால் கட்டப்பட்ட அணைத்து கோபுரங்களிலும் மகாவீரர் சிலை ஏதாவது இரு இடத்தில கண்டிப்பாக இருக்கும்,வேண்டுமென்றால் கோபுரங்களை உற்று கவனியுங்கள் புரியும்,,,
நாடார்கள்(சேர சோழ பாண்டியர்கள் ) கள்ள மறவ கூட்டு சதியால் நாயக்க மன்னர்களிடம் ஆட்சி இழந்த போதும் சரி நாஞ்சில் நாட்டில் மலையாள நாயர்கள் தோள்சீலை கொடுமை செய்த பொதும் சரி வெள்ளைய+நாயர் +நாயக்க கூட்டு சதியலும் சரி நாடார்களை அடக்க முடியவும் இல்லை அழிக்கவும் முடியவில்லை, பல்வேறு மதங்களையும் வழிபாடும் முறைகளையும் உருவாக்கியவர்களும் இந்த சான்றோர் குல நாடார்கள் தான்.
இந்த பூமி உள்ளவரை நாடார் வரலாறு அழியாது ,அந்த வானம் அழியும் வரை விண்ணுலகிலும் நாடார் புகழ் மறையாது.விண்ணும் மண்ணும் கட்டியளந்தவன் தான் இந்த நாடாள்வான் என்னும் சான்றோர் என்ற நாடார்.....

7 comments:

  1. அருமையான பதிவி ... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. எம் குலம் உயர்க!

    ReplyDelete
  3. மெய் சிலிர்க்கிறது

    ReplyDelete
  4. வாழ்க நாடார் இனம் வளர்க நாடார் புகழ்

    ReplyDelete
  5. சேர சோழ பாண்டிய வம்சம் சான்றோர் என்ற நாடார் இனமே வெல்வோம் மீண்டும் நாட்டை ஆள்வது நிச்சயம்

    ReplyDelete
  6. வில்லவர் மற்றும் பாணர்

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும்.

    இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும்.

    பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர்.
    அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். எ.கா

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.

    பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.


    வில்லவர் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்


    பாணா மற்றும் மீனா

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்குஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.

    மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களுக்கும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில்தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  7. வில்லவர் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.


    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர்
    2. குகன்குலத்தோர்
    3. கவுரவகுலத்தோர்
    4. பரதவர்
    5. களப்பிரர்கள்
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர். கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் தெலுங்கு பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    ReplyDelete