Tuesday, March 10, 2015

திருச்செந்தூர் ராஜகோபுரத்தை கட்டிய நாடார்

திருச்செந்தூர் ராஜகோபுரத்தை கட்டிய நாடார்

திரு.ஆறுமுக சுவாமி நாடார் சிலை அழகை பாருங்கள்.....



திருச்செந்தூர் இராஜ கோபுரத்தை கட்டிய மகான்.
இவரது ஊர் திருநெல்வேலி 'கடையம்'.

கடையம் சிவன்கோவிலில் பவனி வரும் திருத்தேரின் கைங்கர்யமும் திரு.ஆறுமுகசாமி இராஜ சித்தருடையதே!

பெரும்பாலான தமிழக கோவில்களில் உள்ள இராஜ கோபுரங்கள் மன்னர்களின் கொடையால்தான் கட்டப்பட்டுள்ளது.

சித்தர்களின் திருத் தலமான திருச்செந்தூரில் "என் முருகபெருமானுக்கு பல்லாண்டு காலமாக இராஜ கோபுரமே இல்லையே" எனும் ஏக்கத்தில் கடையத்தை விட்டு திருச்செந்தூருக்கு தான் சேமித்த பொருளாதாரத்துடன் புறப்பட்டு தன் இறுதி காலம் வரை வாழ்ந்து வந்தார் மகான் ஆறுமுகசாமி .

திருவாடுதுறை ஆதீனம் உள் பட பல சான்றோர் (நாடார்) குல கொடையாளர்களை ஒருங்கிணைத்து இந்த அதிசய இராஜ கோபுரத்தை உருவாக்கிய ராஜசித்தர் ஆறுமுகச்சாமி நாடார்.

திருச்செந்தூர் இராஜ கோபுரத்தின் உயரம் 120 அடி.
கடல் மண்ணாக இருப்பதாலும்,கடலை மிக அருகில் ஒட்டியே இருப்பதாலும் மிகுந்த சிரமத்துக்கு இடையில் சுமார் 90 அடி ஆழம் அடித்தள கட்டுமானம் அமைத்தார்.

அஸ்திவாரத்தில் நீரின்றி கோபுரம் வெடிப்பு விட்டு விடக்கூடாது என்பதால் கோபுரத்தின் நான்கு புறமும் சரளமாக நீர் புக கோபுரத்தின் நான்கு புறமும் மணற்பாங்கான காலி பகுதியாகவே இருக்கும்படியாக பார்த்துக் கொண்டார் திரு.ஆறுமுகசாமி அவர்கள்.

(இந்த நான்கு புறத்தின் ஒரு பகுதியில்தான் நீர் சரளமாக உள்ளே போகாதவண்ணம் இராஜ கோபுரத்தை மறைத்தும் கட்டப்படுகிறது)

இவர் திருச்செந்தூரில் ஒரு அற்புத தீர்த்த கிணறு ஒன்றை உருவாக்கினார்.கடல் அருகே உள்ள இந்தப் புனித நீரில் குளித்தால் தோல் நோய் நீங்கும்...மற்றும் சித்த பிரம்மையே நீங்கும்.

இம்மகனார்க்கு திருச்செந்தூர் திருக்கோவிலில் அற்புத திரு உருவச் சிலை உள்ளது.

இராஜ கோபுரத்திற்கு நேர் எதிராக அதன் அழகை கருணையுடன் பார்த்து மகிழ வைக்க வேண்டிய திரு.ஆறுமுகசாமி மகான்... தற்சமயம் சித்த மருத்துவம் நடைபெறும் அறையில் ஓரத்தில் இருக்கிறார்.

இது உங்களுக்கு தெரியுமா?

"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்"

எத்தனையோ இடம் முருக பெருமானுக்கு இங்கு இருக்க திருச்செந்தூர் இராஜ கோபுரத்தை மறைத்து தமிழக முதல்வர் தீர்மானத்துடன் காவடி மண்டபம் கட்டப்படுகிறது அதிசயமே!

அதை தடுத்து நிறுத்த உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர முருக பெருமானிடம் உத்தரவு கேட்கச் சென்றேன்(Balasubramania Adityan).
அதிசயமான உத்தரவு அன்று கிடைத்தது.
மறைக்க கூடாது என வழக்கு தொடர்ந்தேன் .

மறுநாள் திரு ஆறுமுகசாமி அவர்கள் பற்றியே அறிந்திராத எனக்கு (Balasubramania Adityan) . என் அருமை நணபரும்,தியாகி சுப்பைய்யர் அவர்களின் பேரனுமான திரு.வினோத் சுப்பையன் Vinoth Hinthu Nationalist Ks மூலமாக திருஆறுமுகசாமி அவர்களின் திரு உருவ சிலையை கண்டேன்.

அப்போது தான் அவர் இராஜ கோபுரத்திற்காக அவர் செய்த தியாகங்களையும் அறிந்தேன்....

எத்தனையோ முறை நான் வந்த போது காண இயலாத திருஆறுமுக சாமி அவர்கள் திரு உருவ சிலை இந்த இராஜ கோபுரம் வழக்கு தொடரும் நேரம் எனக்கு தெரிவானேன்!?...சிலிர்ப்பூட்டும் அதிசயம்.

அதிசயம் இன்னும் என்னை விட்டபாடில்லை....

திருச்செந்தூர் ராஜ்கண்ணா நகரை உருவாக்கிய ஒரு செல்வந்தரின் வீட்டுக்கு என் நண்பரின் இடம் சம்மந்தமான பிரச்சினைகள் குறிப்பை அறிய சென்றேன்.
அவர் எனக்கு முன் பின் தெரியாது.

அவர் அந்த குறிப்புகளை எல்லாம் கொடுத்து விட்டு....என்னிடம்

ஐயா...உங்க குடும்பம் இந்த முருகருக்காக எவ்வளவோ கைங்கர்யம் செய்து இருக்காங்க .

உங்க அப்பா தியாகி S.T.ஆதித்தனார் இந்த ஊருக்கே எவ்வளவோ நன்மைகள் செய்து இருக்காங்க.

நீங்க...இரண்டு வாசல் போட மூலஸ்தானத்தில் உள்ள 40 இஞ்ச் சுவரை உடைக்க வந்த அரசை கோர்ட்டுக்கு போய் தடை ஆணை பெற்று முருகருடைய மூலஸ்தானத்தை காப்பாற்றினீர்கள்.தாமிரபரணிக்காக எத்தனையோ செய்கிறீர்கள் ....

"எனக்கு வயது 84.
என் இடம் அமலிநகரில் உள்ளது.
திரு ஆறுமுகசாமி அவர்களின் இடமும் அதில் உள்ளது.
அந்த தீர்த்த கிணறில் குளித்தால் புத்தி சுவாதீனம் மற்றும் தோல் நோய்கள் தீரும்" என்றார்.
பீரோவைத் திறந்தார்.
சில பத்திரங்களை தந்தார் .
இது ஆறுமுகசாமி அவர்கள் இடத்தின் பத்திரம்.
அவர் பெயராலேயே பட்டாவும் உள்ளது.
ஏதோ இன்று ஆறுமுகசாமி பெயரில் உள்ளவர்கள் அதை பட்டா போட்டு விட கூடும்.
இடம் இன்று பல கோடி பெரும்.

"முருகனின் சொத்தாக சேர்க்க வேண்டிய பணி இனி உங்களது" என்று என்னிடம் பத்திரத்தை கொடுத்தார்.
பெரியவரின் பாதத்தில் விழுந்து ஆசி பெற்று ஒத்துக்கொண்டேன்.
அதிசயமே ...என் அதிசயித்தேன்.

இராஜ வாழ்க்கை வாழும் குடும்பத்தில் பிறந்து இறைவனுக்காக அனைத்தையும் துறந்து வாழ்பவர்கள் இராஜ சித்தர்கள் என போற்றப்படுகின்றனர்.

திருச்செந்தூர் ராஜகோபுரத்தை கட்டிய மகான் ராஜ குடும்பத்தை சார்ந்த "ஆறுமுகக்சாமி நாடார்" ஒரு ராஜ சித்தர் ஆவர்,

"திருச்செந்தூர் கோவிலில் மேலைக் கோபுரம் கட்டப்பட்டப்போது, 1779ல் சான்றோர் சான்றோர் சமூகத்தவரே அதில் முதன்மையான பங்கு வகித்தனர். என்பதை " 1872ல் ஸ்ரீ வைகுண்டம் நீதிமன்றத்தில் இதை நிருபித்தவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மடாதிபதி அய்யாச்சாமி தீட்சிதர்..இவர் வம்ச வழியினர் களை தேடி மீண்டும் உண்மையை நிருபித்து சித்த மருத்துவம் நடைபெறும் அறையில் ஓரத்தில் மறைத்து வைக்க பட்டிருக்கும் இவர் சிலையை வெளிக்கொண்டு வந்து ராஜகோபுரம் முன்னால் நிறுவ போராடும் அய்யா தாமிரபரணி நிறுவனர் Balasubramania Adityan அவர்களுக்கு தமிழ்ச்செல்விநாடாரின் மனமார்ந்த நன்றி.....

நீங்க திருச்செந்தூர் கோவிலுக்கு போனால் இதை பார்க்க முயற்சி பண்ணுங்க.நாடார்களே! நம் வரலாறுகள் மறைக்கபடுவதை தடுப்போம் நாடார்களே......வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !
வீரவேல் முருகனுக்கு அரோகரா ! நாடார்களுக்கு மீண்டும் தமிழ்நாட்டை ஆளும் உரிமை கொடு முருகா ! நன்றி !

30 நாட்களுக்கு முன்பு பதிவிட்ட ஐயா Balasubramania Adityan தகவலுடன் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மடாதிபதி அய்யாச்சாமி தீட்சிதர் வம்ச வழியினருடன் நான் (தமிழ்ச்செல்வி நாடார்) தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொது இதை மீண்டும் நிருபிக்க முடியும் ,கோபுரத்தை கட்டியது நாடார்களே என உறுதிபட சொல்லியதால் இதை இன்று 01.03.2015 ல் பதிவிடுகிறேன்.இப்போ என்மனம் சந்தோஷத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கறது..ஒவ்வொரு நாடார்களுக்கு பரவ வேண்டிய செய்தி இது.சத்தியம் ஒரு நாளும் அழியாது என்பது உண்மை...........

என்றும் அன்புடன்

தமிழ்ச்செல்வி நாடார்.

2 comments:

  1. mikavum arumai...
    unkalathu sevai muga noolil mattumthan entu ninathen...
    aanal inkeiyum kalakkukinteerkale..???

    ReplyDelete
  2. அருமை வாழ்க வளமுடன்.

    ReplyDelete