Sunday, March 8, 2015

ஆண்ட வம்சம் எவனுக்கும் அடங்காது


"ஆண்ட வம்சம் எவனுக்கும் அடங்காது "

இந்த வாக்கியத்தை சொல்ல நாம் தகுதியானவர்கள்தான்.

"கொத்தெடுத்து மண்வெட்டோம் கொற்றவரை கைமுகைப்போம் கூடை தொடோம்"
செங்கோல் ஏந்த வேண்டிய கையில் மண்வெட்டி பிடித்து வெட்டி வேலை செய்ய மாட்டோம் என்றும் பொருள்பட “கொத்தெடுத்து மண் வெட்டோம் கூடையில் மண் சுமவோம்” என்று சொல்லி அடங்கமறுத்து தொடங்கிய நம் போராட்ட வரலாறு.. இன்றுவரை தொடர்கிறது.

ஆண்டுகள் பல ஆயிரம் போர்வீரர்களாக இருந்து போர்புரிந்த வம்சம்..

நமக்குள்ளே வாரிசுரிமை போர்களை செய்து ஆட்சியை கைவிட்ட சேர சோழ பாண்டிய வம்சம்.

ஆட்சியை கைவிட்டு அன்று அடக்கு முறையினர் கைகளில் சிக்கி அடங்க மறுத்து போராட்டம் செய்த வம்சம்.

இன்று உரிமையை மீட்டெடுக்க போராடுகிறது..

என்று தொடங்கியதேன்றே தெரியாத நம் போராட்ட வரலாற்றில் எத்தனை உயிர் தியாகங்கள் எண்ணிக்கையில் சொல்லி மாளாது.
நாம் எதற்காக பல உயிர்களை இழந்தோம்?

நம்மால் ஏன் அமைதியாக வாழமுடிய வில்லை?

சிந்தியது பார்த்தால் ஒரே விடைதான் கிட்டுகிறது.

ஆம், நாம் தன்மானத்தை, உரிமைகளை எச்சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காத குணமுடையவர்கள் என்பதையே நம் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

"நாம் எவருக்கும் அடிபணியாதவர்கள்"

நாம் வரலாற்றில் யாருக்கும் அடிபணிந்து இருந்ததில்லை,யாருக்கும் அடிபணிந்து தொழில் செய்ததில்லை. அடக்கு முறைகளை எதிர்த்து போராடுவதே நாடார்கள் குணம்.போராடுவது தான் நம் இனத்திற்கு அழகு.

துஷ்டர்களை பார்த்து நாம் பின்வாங்க வேண்டாம், நம் முன்னோர்கள் நமக்கு கற்று கொடுத்தது ஒன்றுதான்.
அது...

"உயிரை விட மானம் பெரிது"

வாள் பிடித்த கைகள் ஆயுதம் பிடிக்க தயங்காது என்பதை நாம் உணர்த்த வேண்டும்.

நாடார்கள் ஓன்று சேரும் நாள் வெகுதொலைவில் இல்லை.

- நாடார் நற்பணி இயக்கம்.

4 comments:

  1. 100% உண்மை. ஆண்ட வம்சம் எவனுக்கும் அடி பணியாது.

    ReplyDelete
  2. விரைவில் இனைவோம்

    ReplyDelete
  3. இவர் யார் பெயர் என்ன

    ReplyDelete