Saturday, March 7, 2015

மகளிர் தின சிறப்புப்பதிவு

மகளிர் தின சிறப்புப்பதிவு.




அம்மாவும் , அக்காவும் , மனைவியும் பெண்ணாக வேண்டும் ! குழந்தை மட்டும் ஏன் பெண்ணாக வேண்டாம் !

ஒரு கையில் உலக பெண்கள் தினம் கொண்டாடி மகிழுந்து விட்டு ; மறு கையால் ஒவ்வொரு 1000 பெண் சிசுவில் 88 பெண் சிசுவை அழிக்கிறது இந்தியா !

பெண்ணை அதிகமாய் ஆராதிப்பதும் இந்தியா தான் !

பெண் சிசுவை அதிகமாய் அழிப்பதும் இந்தியா தான் !

பெண்ணை ஓவியம் ஆக்கி ரசிக்கும் அதே நேரத்தில் ;

பெண்ணை ஒளிர விடாமல் தடுப்பதும் இந்தியா தான் !

பெண் கடவுள் ஏராளம் ஏராளம் ! லக்ஷ்மி, சரஸ்வதி, காளி .......



பெண்ணை கடவுள் ஆகி வழிபடுவதும் நாம் தான் !
ஒரே ஒரு பெண் கேரளா ஐயப்பன் கோவியில் கால் வைத்ததற்காக அவளை தண்டித்தும் ; கோவிலையே கழுவி விட்டு, பரிகார பூஜை செய்து பெண் இனத்தையே அசிங்க படுத்தியதும் நாம் தான் !

ஒரு பெண் சிசு அழிப்பு ; ஒரு வம்ச அழிப்பு !
ஒரு பெண் வளர்ப்பு ; ஒரு வம்ச வளர்ப்பு !

அந்த வம்சத்தில் எத்தனை மருத்துவரோ ? எத்தனை அன்னை தெரசவோ ???? யாருக்கு தெரியும் !

வசதி படைத்த கோடிஸ்வரன் கூட புதிதாய் பிறந்த பெண் சிசுவை பார்த்த உடனே "பெண்ணா" என்று முகத்தை சுருக்கும் குறிகிய புத்தி எப்போ நம்மை விட்டு போகும்???

கடவுளே ,இறைவா,ஆண்டவா, தேவனே,கர்த்தரே என்று எத்தனை முறை சொன்னாலும், உதடுகள் ஒட்டாது "அம்மா" என்று ஒருசொல் சொல்லிப்பார் உதடுகள் கூட ஓட்டும்.

பெண் சிசு அழிப்பதை தடுப்போம்,தாய்மையை மதிப்போம்,!
--------------------------------------------------------.
முகநூல் சகோதரிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை.



முன் பின் அறியாதவர்களே முகநூலில்
நாட்புகரம் நீட்டுகிறார்கள் ,அவர்களை பூரணமாக நம்புதல் கூடாது,ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான்
நட்பு ஒருவன் சாகும் வரைக்கும் துன்பம்
தரும் என்பார் வள்ளுவர்.

நண்பர்கள் நம் கருத்தை விரும்புவதாலேயோ ,
ஆமோதிப்பதாலேயோ, நாம எதைச்சொன்னாலும் விரும்புவதால் (இவர்களிடம் தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்) . மற்றவர்கள் மட்டும் நல்லவர்களாகி விடமாட்டார்கள்.

ஒருவர் எல்லை மீறுகிறார்
என எப்படி அறிந்து கொள்ளலாம்?

1. பொதுவாக இல்லாமல் தனியாக
உங்கள் மெஜேஜ் பாக்சில் காலைமதியமாலை இரவு வணக்கம் போடுவது. இதில் என்ன
தவறு என்று கேட்கலாம் அப்படி கேட்பதே உங்களை ஒருவர் தன் தனிப்பட்ட கவனத்தில் ஈர்த்து விட்டார் என்றாகும்.

2. உங்களுக்கு தனிப்பட்ட செல்லப்பெயர் வைத்தோ,
அல்லது சினாமா பாணியில் ராட்சசி, பிசாசு, தேவதைன்னு குறிப்பிட்டாலோ நீங்க
விழித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இப்படி அழைப்பது ஒருவர் மீது தன்
ஆதிக்கத்தை செலுத்த என்பதை மனதில் கொள்ளவும்.

3.முகநூல் தவிர வேறு தளங்களில்
மின்னஞ்சல், அல்லது எஸ்எம்எஸ் மூலம்
வணக்கம் வைத்தல், முகநூலில் வாதிட்ட அல்லது கூறிய கருத்தை உங்களுக்கு விளக்க நினைத்தல்
இது அவர்களின் மீது நீங்க கொண்ட நல்அபிப்பிராயத் திற்கு பங்கம் வந்து விடக்கூடாதென்ற முன்
எச்சரிக்கையின் விளைவு என்பதை கவனத்தில்
கொள்ளவும்.

4. உங்கள் செல்போன் எண்ணை கெஞ்சிக்கூத்தாட
ி வாங்கி தொடர்பற்ற நேரம் கெட்ட நேரத்தில் அழைத்து, உப்புச்சப்பில்ல ாத
விடயத்தைப்பேச முற்படுதல். உடனே எண்ணை பிளாக்செய்து விட வேண்டும்.

5. நேற்று உங்களிடம் பேசாததால் நாளே என்னமோ மாதிரி இருந்திச்சுன்னு ஆரம்பித்து நான் பேசாட்டியும் நீங்க ஒரு மிஸ்டுகால் கொடுங்க என்றால்
சுதாரித்துக்கொள ்ள வேண்டும்.

6. அடுத்து உங்க குரல் சரிய இல்ல உடம்பு சரியா இல்லையா இல்ல வீட்டில் பிரச்சனையான்னு தொடர்வது.(எப்படி உங்க குரலை வைத்தே உங்க
நிலையை ஊகித்து விட்டேன்னு உளவியரீதியாக அனுகுவது இதில் தான் பலபெண்கள் விழுந்து விடுகிறார்கள்)

7. திருமணமாகாத பெண்கள் ஒரு உற்சாகத்தில் தங்கள்
படங்களை வேறுபதிவேற்றி விட்டு படா
ர்கள். பொதுவாக தோழர்கள் கவனிக்க
வேண்டியது. என்தான் நட்பு இருந்தாலும்
கண்ணியமான சொற்களை பயன்படுத்த
வேண்டும்.
---------------------------------------------------------
பெற்றோர்களுக்கு.



உங்கள் குழந்தை முகநூலில் என்ன கருத்தை விரும்புகிறார், எந்த மாதிரி கருத்துக்களை இடுகிறார்கள்னு கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும்.

முகநூலில் தனிப்பட்ட விடயங்களைப்பதியும் நாட்குறிப்பல்ல, முகம் தெரியாத எத்தனையோ பேர் பார்க்கும் விடயம் எனவே, பெற்றோர்கள், பார்ப்பதால் குறைந்து போய்விடாது, குழந்தைகளின் எண்ண ஓட்டத்தை கண்டுகொள்ள உதவும் நிலைடதுமாறும் போது கைகொடுத்து விழாதவறு காக்க கைநீட்ட முடியும்..

குழந்தைகளின் பாஸ்வேர்டை பெற்றோர் அறிந்திருக்க வேண்டும் செல்போனாக இருந்தாலும் வந்து சென்ற குறுஞ்செய்திகளை கண்டிப்பாக அழிக்காமல் வைத்திருக்க கூறவேண்டும், பெற்றோர் பார்க்கூடாத செய்தி எனில் அதில் ஏதோ தவறாக இருக்க இடம் உண்டு.

நாட்குறிப்பு தனிப்பட்டது , கடிதங்கள் கூட தனிப்பட்டதாகக்கருத் முடியாது, அதே போல் கணவன்மனைவியும் இருவரும் முகநூலில் இருந்தால் இது என் தனிப்பட்ட விடயம்னு சொல்லக்கூடாது.

முன்பே ஒரு இழையில் குறிப்பிட்ட செய்தி கணவனுக்கும் மனைவியின் பாஸ்வேர்டும் மனைவிக்கு கணவனின் பாஸ்வேர்டும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.

முகநூல் போழுது போக்கிர்க்கே. நேரத்தை வீணடிக்காமல் படிப்பு,மற்றும் வீட்டுவேலைகள் செய்வதற்கு முற்படுங்கள்.
பெற்றோர்கள் நம்பிக்கையை வீணடிக்காதீர்கள்.

அதுபோல எக்காரணத்தை கொண்டும் உங்களது புகைப்படங்களை facebook 'ல் உபயோகபடுத்த வேண்டாம். சில நேரங்களில் அவர்கள் ஆபாசமான படங்களை கோர்த்து விடுவது உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம். கவனமாக இருங்கள் சந்தேகம் உள்ள நபர்களை unfriend செய்து BLOCK செய்துவிடுங்கள்.

சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இதை பகிருங்கள் ,அல்லது தெரிந்தவர்களுக்கு message மூலம் தெரிவியுங்கள்.

தங்கள் பெற்றோர் தம்மை நம்பாமல் கண்காணிப்பதாக குழந்தைகள் நினைக்கக்கூடாது , பெற்றோரும் நம்பமுடியாத நிலையில் உலகம் செல்வதை பக்குவமாக குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும்.
------------------------------------------------------
காதல் என்றால் என்ன?


இப்போது பத்தாவது செல்லும் பள்ளி மாணவர்களும் காதலிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த பருவத்தில் வருவது காதலா என்றால் , நிச்சியமாக இல்லை. அது ஒரு இன ஈர்ப்பு அவ்வளவுதான். அந்த வயதில் ஏற்ப்படும் ஹார்மோனின் தூண்டுதலே இதற்க்கு காரணம்.

"டேய் மச்சான் உனக்கு ஆளு இல்லையா டா, ஏண்டி உனக்கு ஏதும் ஆளு இல்லையா? இந்த மூஞ்சிக்கு எவனும் சிக்கலயா"ன்னு ஒரு சில மாணவ/மாணவிகளே மற்ற மாணவ/மாணவிகளிடம் கேட்கும் பொது அவர்களுக்கு அந்த காதல் எனும் ஆசையானது தூண்டப்படுகிறது. அது ஒழுக்கக்கேடு என்று அவர்கள் அறிவதில்லை .இறுதியில் வகுப்பறையில் இருக்கும் அனைவரையும் காதல் வலையில் தாமாகவே விழுந்து சீரழியும் அவலம் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

அவர்கள் அப்படி மாற முக்கிய காரணம் இன்றைய சினிமாக்கள். காதல் ,முத்த காட்சிகள் இல்லாத படங்களே தற்ப்போது வருவதில்லை. அதை பார்க்கும் விடலை பருவ (டீன் ஏஜ்) குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள், நாமளும் யாரையாவது காதலிக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்குள் எழுகிறது.

அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அம்மாதிரியான சினிமாக்களை பார்க்கவிடக்கூடாது. வீட்டில் டிவியில் அந்த காட்சிகள் வரும் பொது சேனலை மாற்றிவிட வேண்டும். ஆபாசமான புகைப்படங்கள் கொண்டுள்ள பத்திரிக்கைகளை அவர்கள் கண்ணில் படாமல் தவிர்ப்பது நல்லது.

அவர்கள் ஒழுக்கமான குழந்தைகளுடன் பழகுகிறார்களா என கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு தகாத நட்பு அது பற்றி எடுத்து கூறவேண்டும்.

- Rex Nadar (நாடார் நற்ப்பணி இயக்கம் )

No comments:

Post a Comment