Saturday, March 7, 2015

நட்டாத்தி நாடார்கள்

நட்டாத்தி நாடார்கள்
சுந்தரசெகர அரங்கன் திருவழுதி நாட்டினை (தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பகுதி) பெருங்குளத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த மன்னர்.அவரது சிலை பெருங்குளம் கோவில் அருகில் தற்போது அமைந்துள்ளது. இவரே ராஜ ராஜ சோழனின் வலங்கை பிரிவின் தலைவனாக இருந்தவர். வலங்கை பிரிவானது சோழ மன்னர்களின் உறவினர் பிரிவாகும்.
கிபி 1002 ல் சோழரான சுந்தரசெகர அரங்கன் வலங்கை படைகளுக்கு தலைமை தாங்கி பாண்டியர்களை தோற்காடித்தார் , அதன் காரணமாக அவர் திருவழுதி நாட்டின் ஆட்சியாளராக நியமிக்க பட்டார். பெருங்குளத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார்.
சுமார் 200 வருடங்களுக்கு பிறகு சுந்தர பாண்டியனின் எழுச்சியால் திருவழுதி நாடு பாண்டியர்களின் ஆட்சிக்கு திரும்புகிறது. அப்போதைய திருவழுதி நாட்டின் ஆட்சியாளர்கள் குறுகிய வறண்ட பகுதிகளுக்கு தள்ளப்பட்டு குறுநில மன்னராக்க படுகின்றனர்.
அந்த குறுநில மன்னர்கள் அவ்வறண்ட பகுதிகளை விவசாயத்திற்கு ஏற்ற நிலமாக மாற்றுகின்றனர். பின் அவர்கள் நட்டாத்தியார் என்றும் அந்த நிலமானது நட்டாத்தி என்றும் அழைக்கப்பட்டது. சுந்தரசெகர அரங்கனாரின் சிலை நட்டாத்தி கோவிலில் அமைந்துள்ளது.

நட்டாத்தி:
நட்டாத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய ஊராட்சி,அது வைகுண்டபுரம் ,பட்டாண்டிவிளை,கொம்புக்காரன் பொட்டல் மற்றும் சின்ன நட்டாத்தி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது.
அங்கு வாழ்ந்த குறுநில மன்னர்கள் நட்டாத்தியார் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் ஜமீன்தார் நிலையை அடைவதற்கு முன் 18 ஆம் நூற்றாண்டு வரை தங்களை சோழர்களின் வம்சாவழியினர் என்றே கூறி வந்தனர்.
சுந்தரசேகர அரங்கன் மற்றும் அவர் வாரிசுகளின் காலமான 11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் நட்டாத்தியார்கள் திருவழுதி நாடு முழுவதும் சக்தி வாய்ந்த ஆட்சியை நிறுவினர். சோழர்கள் வீழ்ச்சிக்கு பிறகு அவர்கள் 13 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளின் போதே குறுநில மன்னர்களாக்கப்பட்டனர்.
நட்டாத்தியார்கள் நாடன் ,நாடர் நாடாழ்வார் என்றும் அழைக்கப்பட்டனர். நாயக்கர்களின் படையெடுப்புக்குப்பின்னர் அவர்கள் நட்டாத்தி நாடார் என்று அழைக்கப்பட்டனர்.. நாயகர்களின் படையெடுப்புக்கு பின்னரே மக்கள் சாதி பெயரை வைத்து அழைக்கப்பட்டனர்.

நட்டாத்தியார்கள் கோயில்களில் மற்றும் தங்கள் சடங்குளில் அதிகமாக தங்களை அர்ப்பணித்து கொண்டனர்., இதன் காரணமாகவே அவர்கள், மதுரை நாயக்கர் மன்னர்களிடமிருந்து எந்த தாக்கமும் இல்லாமல் இருந்தனர். 1801 வரை அங்கு நட்டாத்திகளின் சுதந்திரமான குறுநில ஆட்சி நிலவியது. பிரிட்டிஷ் வருகைக்கு பின்னர் அவர்கள், ஜமீன்தார் அந்தஸ்திற்கு இறக்கப்பட்டனர்.
கட்டபொம்ப நாயக்கரும் நட்டாத்தி மன்னரும்.
கட்டபொம்மன் நாயக்கருக்கும் நட்டாத்தி மன்னருக்கும் இடையே ஒரு நல்ல உறவு நிலவியது. நட்டாத்தி மன்னர்களின் பகுதியில் கட்டபொம்மன் அவ்வப்போது ஒரு வாரம் வரையில் தங்குவார். ஆகவே அவர்களிடையே நல்லறவு வளர்ந்தது. இதன் மூலமே கட்டபொம்மன் சிலம்பம்,மற்றும் குஸ்தி (மல்யுத்தம்) போன்ற கலைகளை நட்டாத்தி மன்னர் தயார் செய்த ஆட்களிடம் இருந்து கற்றுக்கொண்டார் என ஒரு கருத்தும் நம்பப்படுகிறது.
1799 மற்றும் 1801 களில் நட்டாத்தி மன்னர் பிரிட்டிஷ்கு எதிரான போரில் கட்டபொம்மன் நாயக்கருக்கு துணைபுரிந்தார். மேலும் நிதி உதவி மற்றும் ஆட்களை வழங்கினார். ஊமைத்துரை கைதுக்குபின்னரே நட்டாத்தி மன்னர் கட்டபொம்மனுக்கு போர்காலத்தில் உதவியது தெரியவந்தது. பின் நட்டாத்தி மன்னருக்கு கைது ஆணை பிரபிக்கபட்டது.
நட்டாத்தியார்கள் மன்னர் அந்தஸ்திலிருந்து ஜமீந்தார் அந்தஸ்திற்கு வந்தமை.
நட்டாத்தி மன்னருக்கு கைது ஆணை பிறபித்த பின்பு, அதிலிருந்து தப்பும் விதமாக களக்காடு மற்றும் முண்டந்துறை பகுதிகளில் பன்னிரண்டு ஆண்டுகள் வரை பதுங்கலாயிற்று. பின்னர் எட்டயபுரம் ராஜா உதவியுடன் பிரிட்டிஷ் அரசினை சமாதானப்படுத்தி மீண்டும் இப்பகுதியை ஒரு ஜமீன்தாராக ஆட்சி செய்யும் அந்தஸ்தை.பெற.1866 ல் தூத்துக்குடி அருகில் நடந்த ரப்பர் கொள்ளைகளை தடுக்க உதவியதால் நட்டாத்தி ஜமீன்தாருக்கு சென்னை காவல்துறை ஆய்வாளரிடம்மிருந்து. பாராட்டு கடிதம் வந்தது. அதோடு அவர் அவரது சொந்த பகுதிக்கு அவரது படையாட்கள் மற்றும் பல்லக்குடன் திரும்பசெல்ல ஆணைப்பத்திரம் ஓன்று பிரிடிஷ் அரசிடமிருந்து வந்தது.
கடைசி நட்டாத்தி ஜமீன்தார்.
கடைசி நட்டாத்தி ஜமீன்தாரான திருவழுதி வைகுண்ட நாடான் 1864 ல் பிறந்தார், அவர் பிறந்த இரண்டு ஆண்டுகளில் அவரின் தந்தையார் இறந்துவிட்டார்,எனவே தாயார் வெள்ளாச்சி அம்மாள் அவர்களே நிர்வகாக பொறுப்பினை எற்றுகொள்ளும்படி ஆயிற்று. அவருக்கு நிர்வாக உதவியாக மதுரகவி என்பவர் இருந்தார்.

திருவழுதி வைகுண்ட நாடான் அவர்கள் குதிரை ஏற்றம், சிலம்பம் மற்றும் குஸ்தி (மல்யுத்தம்) போன்ற கலைகளை சிறுவனாக இருந்த போதே கற்றுக்கொண்டார். "பாபாஜன் பட்டாணி" அவரை குஸ்தியில் சிறந்தவராகவும், "ராமு நாயக்கர்" (கட்டபோம்மனின் வாரிசு) அவரை குதிரை ஏற்றத்தில் சிறந்தவராகவும் மற்றும் சுப்பா நாயக்கர் அவரை சிலம்பத்தில் சிறந்தவராகவும் செய்தனர்.
1880 ல் திருவழுதி வைகுண்ட நாடான் அவர்கள் நட்டாத்தி ஜமீன்தார் முடிசூட்டப்பட்டார்.பிற்காலத்தில் அவருக்கு ஆண் வாரிசுகள் இல்லாமல் போனதால், அவருக்குப் பின் ஜமீன்தார் ஆட்சி முடிந்துவிட்டது. பின்னர் அவரது மகள்கள் வழித்தோன்றல்களே, இக்காலத்தில் இன்று பண்ணையார்களாக அப்பகுதியில் உள்ளனர்.

மற்ற ஜமிந்தார்களுடன் நல்லுறவு:
அவரது ஆட்சியின் போது எட்டயபுரம், மணியாச்சி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஜமீன்தார்களுடன் ஒரு நல்லுறவு இருந்தது.அவர் வளர்ச்சி கண்ட எட்டையபுரம் ராஜா அவருக்கு ஒரு குதிரையை பரிசளித்தார். அக்காலகட்டத்தில் நட்டாத்தி பண்ணைவீட்டு வேட்டை நாய் அப்பகுதியில் பிரபலமாக இருந்தது. அதில் ஒன்றை வைகுண்ட நாடான் அவர்கள் சிவகங்கை ஜமீனுக்கு பரிசளித்தார். அதற்க்கு பதிலாக சிவகங்கை ஜமீன் பரிசாக அளித்த பல்லக்கு ஓன்று இன்றும் அப்பகுதியில் உள்ளது.
ஜமீன் அரண்மனை:
8 ஆண்டுகளுக்கு சட்ட போராட்டத்தின் பிறகு அவரது மகள் பொன்னம்மாள் நாடாச்சிக்கு சொத்துரிமை கிடைத்தது. அரண்மனையானது 3 ஏக்கர் பரப்பளவில். இருக்கிறது அதில் ஒரு கொலுமண்டபம், அந்தபுரம், மாடமாளிகை, ஆயுத அறையும் இருக்கிறது. அது ஆதிநாராயண சுவாமி சுப்ரமணியர் கோவிலின் வளாகத்தில் அமைந்துள்ளது.

தற்போது உள்ளூர் மக்கள் திருவழுதி வைகுண்ட நாடான் நட்டாத்தி ஜமீன்தாருக்கு ஒரு சிலைஅமைக்க நடவடிக்கைகளை எடுத்து அதை அரசு அங்கீகரிக்க கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

21 comments:

  1. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  2. வில்லவர் மற்றும் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவர்.

    ReplyDelete
  3. அசுர திராவிட துடக்கம்

    தைத்யர் மற்றும் தானவர் குலங்களின் கிளர்ச்சி

    தைத்ய குலத்தின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார். தைத்ய மன்னர் மகாபலியின் தலைமையில் தானவர்கள் தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) எதிராக கிளர்ச்சி செய்தனர். சத்திய யுகத்தின் போது தேவர்கள் (ஆரியர்கள்) தானவர்களை சொர்க்கத்திலிருந்து (வட இந்தியாவிலிருந்து) நாடுகடத்தினர்.

    நாடுகடத்தப்பட்ட பின்னர், தானவர்கள் விந்திய மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தானவா என்றால் தனு உள்ளவர்கள் அதாவது வில் உள்ளவர்கள், வில்லவர். பாணா மற்றும் அவர்களது கிளைக்குலங்களான தைத்யா மற்றும் தானவா ஆகியோர் அசுரர்களாக கருதப்பட்டனர். திராவிட வில்லவர், மீனவர் மற்றும் அசுர பாணா, மீனா குலங்கள் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர்.

    தானவா மல்யுத்த வீரர்கள்

    கம்ச மன்னரின் உத்தரவின்படி, அக்ரூரா என்ற யாதவ மூப்பர் கிருஷ்ணர் மற்றும் பலராமரை,மதுராவில் நடந்த ஒரு தனுஷ் யாகம் மற்றும் நட்பு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள அழைத்திருந்தார். பயங்கரமான தானவா மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா ஆகியோர் இளம் கிருஷ்ணர் மற்றும் பலராமனால் கொல்லப்பட்டனர்.

    புத்தமதத்தில் தானவர்

    புத்தமதத்தில் அவர்கள் வில் தரிக்கும் தானவேகச அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    முந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்கள் ஆவர். அவர்கள் பல திராவிட நாடுகளை உண்டாக்கினர். தென்னிந்தியாவில் பல பாண்டியன் ராஜ்யங்கள் வில்லவர்-மீனவர் குலங்களால் நிறுவப்பட்டன.

    வட இந்தியாவில் வில்லவர் தொடர்புடைய பாணா-மீனா வம்சங்கள் மகாபலி என்று அழைக்கப்படும் மன்னர்களால் ஆளப்பட்ட ஏராளமான பாணப்பாண்டியன் ராஜ்யங்களை நிறுவினர்.

    மகாபலி வம்சம்

    வில்லவர் மற்றும் பாணர்கள் இருவரும் அசுர மன்னர் மகாபலி மற்றும் அவருடைய மூதாதையரான ஹிரண்யகசிபு ஆகியோருடைய வம்சத்திலிருந்து வந்ததாகக் கூறினர். தென்னிந்திய பாண மற்றும் பாண்டியன் மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தி வந்தனர். ஹிரண்யகசிபுவின் பண்டைய தலைநகரம் இரணியல் (ஹிரண்ய சிம்ஹ நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி புராணத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் பொதுவான கடவுளான பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தார். முழு பிரபஞ்சத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் கொல்லப்படமாட்டார் என்ற அழியாத வரத்தை பாணாசுரன் பெற்றார். திருமணமாகாத பெண் அல்லது குழந்தையால் மட்டுமே பாணாசுரனை கொல்ல முடியும். கன்னியாகுமரி பராசக்தியின் அவதாரமாக பிறந்தார். பாணாசுரன் கன்னியாகுமரியை கடத்த முயன்றார் ஆனால் கன்னியாகுமரி தேவியால் கொல்லப்பட்டார்.

    சீதையின் சுயம்வரத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் மற்றும் ராவணன் இருவரும் சீதா தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இராவணனும் பாணாசுரனும் வில்லைப் பார்த்தவுடன் அமைதியாக நழுவி விட்டனர்.

    மகாபாரத காலத்தில் பாணாசுரன்

    பாணாசுரனின் மகள் உஷா பகவான் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனை கனவு கண்டார். உஷாவின் தோழி சித்ரலேகா, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலம், கிருஷ்ணரின் அரண்மனையில் இருந்து அனிருத்தனை கடத்தி, உஷாவிடம் கொண்டு வந்தார். அனிருத்தன் உஷாவை விரும்பினார் ஆனால் பாணாசுரன் அவனை சிறையில் அடைத்தார். இது பகவான் கிருஷ்ணர் பலராமன் மற்றும் பிரத்யும்ன னுடன் ஒரு போருக்கு வழிவகுத்தது, பாணாசுரன் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு உஷாவுடன் அனிருத்தனுக்கு திருமணம் நடந்தது.

    ஆந்திராவில் ஒரு பாண இராச்சியம் இருந்தது, இது விஜயநகர நாயக்கர்கள் உட்பட பலிஜாக்களின் பல ஆளும் வம்சங்களை உருவாக்கியது. மன்னன் மகாபலியில் தோன்றியதால் அவர்கள் பலிஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பலிஜாக்கள் பாணாஜிகா அல்லது வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
    வாணாதி ராயர், வன்னியர் மற்றும் வாணர் ஆகியவையும் தெலுங்கு பாணர்களின் பாண வம்ச பட்டங்கள் ஆகும்.

    வாணர்

    பாணர் காடுகளில் தங்க விரும்பினர். எனவே கடம்ப பாண தலைநகரான பாணவாசியை வனவாசி என்றும் அழைத்தனர். அவர் வாணர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வானர அரசர் பாலியின் தலைநகரம் கிஷ்கிந்தா. பலிஜா நாயக்கர் அரச குடும்பத்தினர் கிஷ்கிந்தா அருகே உள்ள ஆனேகுண்டியில் தங்கியுள்ளனர்.
    விஜயநகரை ஆட்சி செய்த பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி ஆகும்.


    கர்நாடகாவில் பாணப்பாண்டியன் இராச்சியங்கள்

    கர்நாடகாவில் கடம்ப இராச்சியம், நூறும்பாடா பாண்டியன் இராச்சியம், சான்றாரா பாண்டியன் இராச்சியம், உச்சாங்கி பாண்டியன் இராச்சியம், ஆலுபா பாண்டியன் இராச்சியம் உள்ளிட்ட பல பாணப்பாண்டியன் இராச்சியங்கள் இருந்தன.

    கடலோர கர்நாடகாவை ஆண்ட துளுவ வம்சம் பாணப்பாண்டியன் குலமாகும். பாண சாளுவ வம்சம் கோவாவை ஆண்டது. சாளுவ மற்றும் துளுவ பாணகுலங்கள் விஜயநகர் பேரரசின் இரண்டு வம்சங்களை உண்டாக்கின.

    ReplyDelete


  4. அசுர திராவிட துடக்கம்

    பாண்பூர்

    வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.

    மகாபலி

    மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.


    மீனா வம்சம்

    இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

    மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
    மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.

    பாணா மீனா குலங்கள்

    வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.

    கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

    பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.

    பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி

    வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, ​​பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.

    திராவிட பாரம்பரியம்

    உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.

    சித்தியன் படையெடுப்பு (கிமு 150)

    ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.

    நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.

    ReplyDelete
  5. அசுர திராவிட துடக்கம்

    வில்லவர் மீனவர்

    தமிழ் வில்லவர் மற்றும் அதன் துணைக்குழுக்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் என்று அழைக்கப்பட்ட அவர்களின் கடலில் செல்லும் உறவினர்கள், இவர்கள் அனைவரும் பண்டைய பாண்டியன் இராச்சியத்தை நிறுவியவர்கள் ஆவர். பண்டைய பாண்டியன் மன்னர்கள் தங்கள் துணைக்குலங்களால் அறியப்பட்டனர் எ.கா. மலையர் குலம்-மலயத்வஜ பாண்டியன். வில்லவர் குலம்-சாரங்கத்வஜ பாண்டியன் மீனவர் குலம்-மீனவ பாண்டியன்போன்றவர்கள்.

    வில்லவர் குலங்களின் இணைப்பு

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் மீனவர் குலங்களுடன் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கின.

    பாண்டிய ராஜ்ஜியத்தின் பூர்வீகம்

    பாண்டிய ராஜ்ஜியத்தின் ஆரம்பம் குமரிக்கண்டத்தில் வரலாற்றுக்கு முந்தையது. தலைநகரங்கள் தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரை.

    காலவரிசை

    1. முதல் பாண்டிய இராச்சியத்தின் அடித்தளம் (கிமு 9990)
    2. முதல் பிரளயம் (கிமு 5550)
    3. இரண்டாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    4. இரண்டாம் பிரளயம் (கிமு 1850)
    5. மூன்றாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    6. சங்க யுகத்தின் முடிவு (கி.பி. 1)


    பாண்டியன் ராஜ்யத்தின் பிரிவு

    பண்டைய பாண்டிய இராச்சியம் தமிழத்தில் சேர, சோழர் மற்றும் பாண்டியன் ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டது.

    வில்லவர் ராஜ்யங்களின் முடிவு.

    கி.பி 1120 இல் அரேபியர்களின் உதவியுடன் கேரளாவைத் தாக்கிய துளு-நாயர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர வம்சம் கொடுங்கலூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கி.பி 1310 இல் மாலிக் கஃபூரின் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீதுள்ள தாக்குதல் மற்றும் தோல்விக்குப் பிறகு, வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேரளா முழுவதும் துளு-நேபாள ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி 1335 க்குப் பிறகு கேரளாவில் அஹிச்சத்திரம்-நேபாளத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    தமிழ்நாட்டை தெலுங்கு பலிஜாக்கள் மற்றும் வாணாதிராயர்கள் ஆக்கிரமித்தனர். வாணாதிராயர்கள் தமிழ்நாட்டின் கங்கை நாகர்களின் தலைவர்கள் ஆனார்கள். கி.பி 1377 க்குப் பிறகு கேரளாவும் தமிழகமும் பாண மன்னர்களால் ஆளப்பட்டன. கேரளா மற்றும் தமிழ்நாடு வடுக நாகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

    தெற்கே வில்லவர் குடியேற்றம்
    கேரளா
    1. கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு இடம்பெயர்வு (கி.பி 1102)
    2. கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்வு (கி.பி 1335)

    தமிழ்நாடு
    1. தஞ்சாவூரில் இருந்து களக்காட்டுக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    2. மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    3. திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்திற்கு இடம்பெயர்வு (கி.பி. 1377 முதல் கி.பி .1640 வரை)

    வட இந்தியாவில் வில்லவர்
    வில்லவர் குலங்கள்
    1. வில்லவர் = பில்
    2. மலையர்
    3. வானவர் = பாணா
    4. மீனவர் = மீனா

    வில்லவர் பட்டங்கள் மற்றும் பாணரின் பட்டங்கள் வில்லவர் = பில், பில்லவா, சாரங்கா, தானவா
    மலையர் = மலெயா, மலயா
    வானவர் = பாணா, வானாதிராயர்
    மீனவர் = மீனா, மத்ஸ்யா
    நாடாள்வார் = நாடாவா, நாடாவரு, நாடாவரா.
    நாடார் = நாடோர்
    பணிக்கர் = பணிக்கா
    சான்றார் = சான்றாரா, சான்தா
    பாண்டியன் = பாண்ட்யா
    மாவேலி = மகாபலி

    முடிவுரை

    வில்லவர்-நாடார் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட வில்லவர் மற்றும் பாண குலங்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி ஆட்சியாளர்களைச் சேர்ந்தவை. டெல்லி படையெடுப்பைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலைதான் வில்லவரின் வீழ்ச்சிக்குக் காரணம். மற்றொரு காரணம் வில்லவர் மற்றும் பணிக்கர் மற்ற நாடுகளுக்கு வெளியேறியது.

    ReplyDelete
  6. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    கேரள வில்லவர் இடம்பெயர்வு

    துளு படையெடுப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட
    வில்லவர் கி.பி.1102ல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு குடிபெயர்ந்தனர்.
    1120 இல் பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் ஒரு நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்தார். பாணப்பெருமாள் அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டார்.

    மாலிக் காஃபூரின் தாக்குதல்

    கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய இராச்சியத்தை தோற்கடித்தார். அடுத்த காலகட்டத்தில் வில்லவர் மக்கள் டெல்லி சுல்தானகத்தின் துருக்கிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். விரைவில் அனைத்து தமிழ் அரசுகளும், சேர சோழ பாண்டிய வம்சங்களும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் தோற்கடிக்கப்பட்ட குலமாக மாறினர்.

    கேரள வில்லவர் கிபி 1314 க்குப் பிறகு மேலும் தெற்கே திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு நகர்ந்து கன்னியாகுமரி மற்றும் சேரன்மாதேவிக்கு அருகிலுள்ள கோட்டையடியில் தங்கள் தலைநகரை நிறுவினார்.
    பண்டைய வில்லவர் தலைநகரான இரணியல் (ஹிரண்ய சிம்ம நல்லூர்) ஆய் வம்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது.

    சேரன்மாதேவி

    சேரன்மாதேவியில் கேரள வில்லவர்கள் மற்றொரு கோட்டையைக் கட்டினார்கள். இது கி.பி 1383 முதல் கிபி 1444 வரை துளு-சேராய் வம்சமான ஜெயசிம்ஹவம்சத்தின் தலைநகராக செயல்பட்டது.

    கோட்டையடி

    வாய்மொழி மரபுகளில் கன்னியாகுமரிக்கு அருகில் இருந்த கோட்டையடி என்னும் சேர கோட்டை இருந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டையடி கடைசி சேரர் கோட்டை. வேணாட்டின் ஆய் அரசரான ராமவர்மா கோட்டையடியைச் சேர்ந்த இளவரசியை மணக்க விரும்பியபோது அவர்கள் மறுத்துவிட்டனர். 'நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்' என்ற முதுமொழி இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. பிற்காலத்தில் ஆய் வம்சம் வில்லவ நாடார்களின் எதிரியாக இருந்தது.

    நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்.

    கி.பி.1610 இல் குழித்துறையைத் தலைநகராகக் கொண்டு வேணாட்டை ஆண்ட துளு-ஆய் மன்னன் ராமவர்மா. கி.பி.1610க்குப் பிறகு வேணாடு மன்னர்களால் கோட்டையடி அழிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டிலிருந்து வேணாட்டுக்கு வில்லவர் இடம்பெயர்வு

    பாண்டியர் தோல்வியைத் தொடர்ந்து ஒரு பாண்டிய குலத்தினர் விஜயநகர நாயக்கர்களின் ஆட்சியை ஏற்று தென்காசியில் இருந்து ஆட்சி செய்யத் தொடங்கினர். மற்ற சோழ மற்றும் பாண்டிய வம்சங்கள் தெற்கு நோக்கி நகர்ந்தன.

    ReplyDelete
  7. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    துளு மற்றும் தமிழ் வில்லவர் கலப்பு அரசுகள்

    கி.பி 1383 முதல் 1595 வரையிலான காலப்பகுதியில் தமிழ்ச் சேராய் இராச்சியத்துடன் கலந்த துளு தாய்வழி இராச்சியம் வேணாட்டை ஆண்டது. தமிழ்ச் சேராய் அரசை வில்லவர் வீரர்கள் ஆதரித்தனர்.
    வில்லவர் தலைநகரங்கள் கோட்டையடி, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு என்பவை.

    களக்காடு

    களக்காடு என்ற இடத்தில் ஒரு சோழர் குடும்பம் கோட்டை கட்டியது. களக்காடு ஜெயசிம்மவம்சத்தின் தலைநகராக கி.பி.1516 முதல் கி.பி.1595 வரை இருந்தது.

    துளு-சேராய் ஆட்சியாளர் பூதல வீர ஸ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா (கி.பி. 1516 முதல் கி.பி. 1535 வரை) சோழ இளவரசியை திருமணம் செய்து கொண்டார். தமது தலைநகரத்தை களக்காட்டிற்கு மாற்றினார்.

    பட்டங்கள்
    வென்று மண்கொண்ட பூதல வீரன்
    புலி மார்த்தாண்டன்
    தலைநகரம்: களக்காடு

    சோழ இளவரசி சோழகுலவல்லியை திருமணம் செய்தார்

    களக்காட்டின் மாற்றுப் பெயர் சோழகுலவல்லி புரம். களக்காடு இராச்சியம் முள்ளிநாடு என்று அழைக்கப்பட்டது. பூதல வீர உதயமார்த்தாண்ட வர்மா ஜேதுங்கநாட்டின் (கொல்லம்) ஆட்சியாளராக இருந்தார்.

    பாறை மற்றும் தோவாளை மலைகளுக்கு இடையே உள்ள நாடார்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கல்வெட்டு வைத்தார்.

    கிறிஸ்தவ பரவருக்கு வரிச் சலுகை கொடுத்தார்.
    நாகர்கோவில் ஜெயின் கோவிலுக்கு மானியம் வழங்கினார்.
    விஜயநகர படைத்தலைவனாகிய சலகராஜா சின்ன திருமலையதேவா பூதலவீரனை தாமிரபரணி கரையில் கிபி 1535 இல் தோற்கடித்தார். அவர் முன்பு வென்ற அனைத்து பாண்டிய பிரதேசங்களையும் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் விஜயநகரப் பேரரசின் கீழ் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

    கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம்

    தெற்கே குடியேறிய பாண்டியர்கள் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினார்கள். கல்லிடைக்குறிச்சி ஜெயசிம்ம வம்சத்தின் தலைநகராக கி.பி 1444 முதல் கிபி 1484 வரை இருந்தது).

    தென்காசி பாண்டியர்கள்

    இருப்பினும் தென்காசி பாண்டியர்கள் வேணாட்டின் துளு-சேராய் ஆட்சியின் ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்தனர். தென்காசி பாண்டிய நாடு மதுரை நாயக்கர் சாம்ராஜ்யத்தின் அடிமை நாடாக மாறியது

    வில்லவர் ராஜ்ஜியங்களின் முடிவு

    கி.பி 1610 இல் போர்த்துகீசியர்கள் கொச்சி இராச்சியத்தில் உள்ள வெள்ளாரப்பள்ளியிலிருந்து ஒரு பிராமண வம்சத்தை வேணாட்டின் ஆட்சியாளர்களாக உருவாக்கினர்.

    பிராமண ராணி பூரம் திருநாள் ஆற்றிங்கல் நம்பிராட்டியார் அம்மை என்ற திருநாமத்துடன் ஆற்றிங்கல் ராணி ஆனார்.

    வீரரவி வர்ம ரேவதி திருநாள் குலசேகரப் பெருமாள் (கி.பி. 1610 முதல் கி.பி. 1662 வரை) வேணாட்டின் முதல் பிராமண அரசர்.
    கொச்சி வெள்ளாரப்பள்ளியில் இருந்து கொச்சுராமன் உண்ணி பண்டாரத்தில் என்ற பிராமண இளவரசன் கி.பி 1630 இல் மீண்டும் தத்தெடுக்கப்பட்டார்.

    வில்லவர் ராஜ்ஜியங்களின் அழிவு

    கி.பி.1610க்குப் பிறகு வில்லவர் கோட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
    சேர, ஆய், சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் முடிவுக்கு வந்தன.
    தென்காசி பாண்டிய வம்சமும் விரைவில் முடிவுக்கு வந்தது.

    வில்லவரின் வீழ்ச்சி

    1750 வரை வில்லவர் வீரர்கள் தங்கள் முன்னாள் எதிரிகளான திருவிதாங்கூரின் துளு-நேபாள மன்னர்களுக்கு கூலிப்படையாக பணியாற்றினர். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளை ஆண்ட வில்லவர்கள் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    ReplyDelete
  8. ஜாட் சமூகத்தில் நாடார் குடும்பப்பெயர்கள்

    வில்லவர்
    வில்லவர் பண்டைய காலத்தில் மத்திய இந்தியா மற்றும் தென்னிந்தியாவை ஆண்டவர்கள். இந்தோ-ஆரியர்கள் மற்றும் நாகர்கள் சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் மட்டுமே தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். இருப்பினும் வேத குலங்களில் காணப்படும் பாணா மற்றும் மீனா (மத்ஸ்ய ராஜ்யம்) குலங்கள் திராவிட மரபினராக இருக்கலாம். ஆரிய இளவரசிகளின் சுயம்வரத்திற்கு பாணர்கள் அழைக்கப்பட்டனர் மற்றும் ஆரியர்களுக்கும் பாணர்களுக்கும் இடையே திருமணங்கள் நடந்தன. கங்கை சமவெளியில் உள்ள இந்த பாணர்கள் ஆரிய கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக்கொண்டனர். பாணா மற்றும் மீனா வம்சங்கள் தமிழ் வில்லவர் மற்றும் மீனவரின் வடக்கு உறவினர்கள் ஆவர்.


    நாகர்கள்

    நாகர்கள் ஆரிய நாட்டில் வசிப்பவர்கள். இந்தி தேவநாகரி என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆரிய மற்றும் நாகா மொழிகளின் இணைப்பால் இந்தி உருவானது என்பதைக் குறிக்கிறது. நாகர்கள் பல அரச வம்சங்களைக் கொண்டிருந்தனர். இருப்பினும் நாகர்களின் சக்தி மெதுவாகக் குறைந்தது. பல நாகர்கள் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். கடைசி பெரிய நாகா வம்சம் கிமு 413 முதல் கிமு 345 வரை ஆட்சி செய்த ஸைஷுனாகா வம்சம் ஆகும்.


    நாகர்களுக்கும் வில்லவர்களுக்கும் இடையிலான பண்டைய போர்

    வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமிக்க தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். சங்க காலத் தமிழ் இலக்கியமான கலித்தொகை, வடக்கிலிருந்து வந்த நாகா படையெடுப்பாளர்களுக்கு எதிராகப் போரிட்ட வில்லவர் மற்றும் மீனவர் கூட்டுப் படைகளுக்கு இடையே நடந்த போரைக் குறிப்பிடுகிறது, இதில் வில்லவர் மற்றும் மீனவர் தோற்கடிக்கப்பட்டனர் மற்றும் மத்திய இந்தியா நாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அவர்களின் தோல்விக்குப் பிறகு வில்லவர் மீனவர் மக்கள் மத்திய இந்தியாவில் இருந்து மெதுவாக மறைந்துவிட்டனர்.


    இந்தோ-சித்தியன் அல்லது சாகா படையெடுப்பு

    கிமு 190 இல் சாகா படைகள் இந்தியாவைத் தாக்கி மேற்கு ஷத்ரபாஸ் மற்றும் வடக்கு ஷத்ரபாஸ் என்று அழைக்கப்படும் மாநிலங்களை உருவாக்கியது, அவர்கள் கிபி நான்காம் நூற்றாண்டின் இறுதி வரை ஆட்சி செய்தனர். இந்தோ சித்தியர்கள் கிபி 78 இல் ஒரு சகாப்தத்தை நிறுவினர், இது சாகா சகாப்தம் என்று அழைக்கப்படுகிறது. மத்திய ஆசியாவின் இந்தோ-சித்தியன் மற்றும் மசாகெட்டே குலங்களின் வழித்தோன்றல்களாக ஜாட்கள் கருதப்படுகிறார்கள். மேற்கு ஷத்ரபாவின் சித்தியர்கள் சிந்து, கங்கை மற்றும் நர்மதா நதி பள்ளத்தாக்குகளை கிபி 35 முதல் கிபி 405 வரை ஆண்டனர்.

    ஜாட் மக்கள்

    ஜாட்கள் என்பவர்கள் வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாபில் காணப்படும் சிப்பாய்கள் மற்றும் விவசாய மக்கள். இடைக்காலத்தில் ராஜபுத்திர அரசுகளுடன் பல ஜாட் ராஜ்ஜியங்களும் இருந்தன. ஜாட் குடும்பப்பெயர்களில் பல திராவிட வில்லவர் நாடார் குடும்பப்பெயர்கள் காணப்படுவது சுவாரஸ்யமானது. ஏனென்றால், பண்டைய காலத்தில் மத்திய இந்தியாவில் வசித்த திராவிட வில்லவர் குலங்களுடன் இந்தோ-சித்தியர்கள் கலந்திருக்கலாம்

    ReplyDelete
  9. ஜாட் சமூகத்தில் நாடார் குடும்பப்பெயர்கள்


    வில்லவர் குடும்பப்பெயர்கள்
    வில்லவர்
    வில்லார்
    பில்லவா
    பாணா
    வானவர்
    சாணான்
    சாணார்
    சாண்டார்
    சாண்டான்
    சேர
    சோழர்
    பாண்டிய
    நாடாள்வார்
    நாடார்
    நாடான்
    பணிக்கர்
    சானார்
    சான்றார்


    நவீன ஜாட் குடும்பப்பெயர்கள்

    பிலார் (வில்லார் போன்றது)

    பில்வான் (பில்லவனைப் போன்றது)

    பாணா (பாணா, வானவர்)
    பாண்சி
    பாண்வைட்
    பாஹ்னிவால்

    சாணான் (சாணானைப் போன்றது)
    சாணார் (சாணாரைப் போன்றது)
    சாண்ணா
    சாணவ் (சானாரைப் போன்றது)
    சாண்பால் (சானாவின் மகன்)
    சாணி (சாணரைப் போன்றது)
    சாண்டார் (சந்தர் போன்றது)
    சாண்டான் (சந்தர் போன்றது)
    சாண்தர்

    சாண்டாவ்ர் (சாண்டார் போன்றது)
    சந்தாவத் (சான்றார் போன்றது)
    சாண்டெல் (சாண்டார் போன்றது)
    சாண்டேலெ (சாண்டார் போன்றது)
    சாண்டேலியா (சாண்டார் போன்றது)
    சாண்தாரி (சாண்டார் போன்றது)
    சாண்டு (சாண்டார் போன்றது)
    சாண்டிவால் (சாண்டார் போன்றது)
    சந்த்ரவன்ஷி (சந்திர வம்சம்)
    சாந்த்வா


    சாணேகர் (சாணாரைப் போன்றது)
    சாண்ங் (சாணாரைப் போன்றது)
    சாண்ங்கல் (சாணாரைப் போன்றது)
    சாண்ங்கரி (சாணாரைப் போன்றது)
    சாண்ங்கர் (சாணாரைப் போன்றது)
    சாணோ (சாணாரைப் போன்றது)
    சாணோன்
    சாண்வான்
    சௌஹான் (சாணானைப் போன்றது)
    சாண் (சாணாரைப் போன்றது)
    சானா (சானாரைப் போன்றது)
    சான்ப் (சானாரைப் போன்றது)
    சானர் (சானரைப் போன்றது)
    சோன்


    சோள் (வில்லவர் மன்னர்கள்)
    சோள
    சேர

    நாடாள் (நாடாள்வார் போன்றது)
    நாடார் (நாடார் போன்றது)
    நாடார்யா (நாடாரைப் போன்றது)
    நாடாவ்ரி (நாடவர் போன்றது)
    நாதான் (நாடான் போன்றது)
    நாதே (நாடாரைப் போன்றது)
    நாட்ரால் (நாடார் போன்றது)


    பனைச் (பனையர் போன்றது)
    பங்கார் (பணிக்கரைப் போன்றது)
    பாண்ட்ய (பாண்டிய. பாண-வில்லவர் அரசர் )
    பாண்டி
    பாண்டா


    சான் (சான்றாரைப் போன்றது)
    சான்பால் (சானாரின் மகன்)
    ஸாண்டா (சாண்டார்)
    சாண்டாஹ்
    சாண்டேலா
    சாந்தால்
    சாந்தர் (சாந்றாரைப் போன்றது)
    சாந்தாவாலியா
    சாந்தி
    சாந்தோ
    சாந்து
    சாங்காஹ்
    சாங்கா
    சான்ஹி


    மத்திய இந்தியாவில் வசிக்கும் பாணா மற்றும் வில்லவர் மக்களில் சிலர் இந்தோ-சித்தியன் படையெடுப்பாளர்கள் மற்றும் அவர்களின் துணைக்குழு மசாஜெடேயில் இணைந்திருக்கலாம். ஜாட்கள் இந்தோ-சித்தியன் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வில்லவர் குடும்பப்பெயர்கள் அவர்களிடையே காணப்படுகின்றன. ஜாட்டுகள் வெவ்வேறு மதங்களை ஏற்றுக்கொண்டனர், அதாவது இந்துக்கள் (47%), சீக்கியர்கள் (20%) மற்றும் முஸ்லிம்கள் (33%). மேலே உள்ள குடும்பப்பெயர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஜாட் மக்களிடமும் காணப்படுகின்றன.

    ReplyDelete
  10. வில்லவர் மற்றும் இயக்கர்


    ஆரம்பகால நாகர்கள்.

    சில நாகர்கள் கிமு ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் இயக்கர்கள் மற்றும் வில்லவர்களுடன் நட்பாக இருந்தனர்.

    திரையர்

    தமிழ் காவியமான மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய இலங்கையில் வசித்து வந்த திரையர் நாக மீனவர்கள் ஆவர். காவியத்தின் கதாநாயகியான மணிமேகலை, கி.பி மூன்றாம் நூற்றாண்டில், புத்தர் (கிமு 563 முதல் 483 கி.மு. வரை) பயன்படுத்திய இருக்கை அல்லது கால் பலகை இருந்த வடக்கு இலங்கையில் உள்ள ஒரு சிறிய தீவான மணிபல்லவத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். புத்தர் உபதேசம் செய்து நாகநாட்டின் இரண்டு மன்னர்களை சமரசம் செய்து வைத்தார்.

    யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் மணிபல்லவத்தை (நைனாதீவு) ஆட்சி செய்த நாக மன்னர் வலை வாணன் மற்றும் அவரது ராணி வாச மயிலையைப் பற்றி மணிமேகலை கூறுகிறார். அவர்களின் மகள் இளவரசி பீலி வளை ஆரம்பகால சோழ மன்னன் கிள்ளிவளவனுடன் நாகத்தீவில் வைத்து தொடர்பு கொண்டிருந்தாள். இந்த தொடர்பு மூலம் இளவரசர் தொண்டை ஈழத் திரையன் பிறந்தார். இளந்திரையன் காஞ்சிபுரத்திலிருந்து தொண்டை நாட்டை ஆண்டான். திரையர் கேரளாவின் தீய்யருடன் தொடர்புடையவராக இருக்கலாம்.


    கடைசி இயக்கர் வம்சம்

    இயக்கரின் அறியப்பட்ட கடைசி வம்சம் புலஸ்திய முனிவரால் நிறுவப்பட்டது. புலஸ்தியர் கிமு 6 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி செய்திருக்கலாம். புலஸ்தியரின் தலைநகரம் நவீன பொலன்னறுவை என்ற புலஸ்தி நகரா ஆகும். புலஸ்தியரின் மகன்கள் அகஸ்திய முனிவர் மற்றும் விஸ்ரவர்.

    அகத்திய முனிவர் பொதிகை மலையில் வசித்து வந்தார், அவர் அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை எழுதினார். விஸ்ரவனின் மகன்கள் குபேரன், இராவணன் மற்றும் விபீஷணன் என்பவர்கள். இராவணனின் ஆட்சி புத்தரின் வாழ்நாளில் இருந்திருக்கலாம். அதாவது கிமு 543 க்கு முன்பு வானர இராணுவத்தால் ராவணன் தோற்கடிக்கப்பட்டிருப்பார். அதைத் தொடர்ந்து சிங்கள நாக வம்சம் கிமு 543 இல் இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது.

    சிங்கள அரசனும், விபீஷணனும் குருக்ஷேத்திரப் போரின் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் என்று மகாபாரதம் குறிப்பிட்டுள்ளது. மகாபாரதம், இலங்கையிலிருந்து சிங்கள அரசர் குருக்ஷேத்ரா போரில் பங்கேற்றதையும், போருக்குப் பிறகு யுதிஷ்டிரரால் நடத்தப்பட்ட ராஜசூய யாகத்தில் சிங்கள அரசர் பங்கேற்றதையும் குறிப்பிடுகிறது. மகாபாரதம் பாண்டவ சகாதேவன் இலங்கையில் மன்னர் விபிஷணனை சந்தித்ததையும் குறிப்பிட்டுள்ளது. சிங்கள இராச்சியம் கிமு 543 இல் நிறுவப்பட்டதால் மகாபாரதம் நடந்த காலம் கிமு 543 க்குப் பிறகாக இருக்கலாம்.

    தாம்பபாணியும் பொலன்னறுவையும் அக்காலத்தில் இயக்கர்களின் இரண்டு தலைநகர்களாக இருந்திருக்கலாம்.

    பிற்கால நாகர்கள்

    ராவணன் தோற்கடிக்கப்பட்ட உடனேயே குஹன் குலத்தைச் சேர்ந்த நாகர்கள் கிமு ஆறாம் நூற்றாண்டில் இலங்கையை ஆக்கிரமித்தனர். குஹன்குலத்தோர் சிங்க நாடு, வங்காள நாடு மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கர் என்பவர்களாவர்.

    இந்த மூன்று நாட்டு மக்களின் கலவையால் முக்குலத்தோர் அல்லது முற்குஹர் உருவானார்கள்.
    முற்குஹரின் மூன்று குலங்கள்
    1. சிங்களவர்கள்
    2. முற்குஹர் (முக்குவர்)
    3. மறவர்

    பின்னர் குகன்குலத்தோர் ஆகிய நாகர்கள் இலங்கை, ராமநாடு மற்றும் கடலோர தமிழகத்தை ஆக்கிரமித்தனர் .ஆரம்பகால சிங்கள இராச்சியம் சிங்கள இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது, ஆனால் பிற்காலத்தில் வங்கர் மற்றும் கலிங்கன் வம்சங்கள் சிங்களரை மாற்றினர்.

    இயக்கர் சிங்களக் கலவை

    கிமு 543 இல் சிங்கள இளவரசர் விஜயன் தனது 700 பேர் இராணுவத்துடன் இலங்கையை அடைந்தார். அவர் இயக்கர் இளவரசி குவேணியை மணந்தார் மற்றும் இயக்கரின் மற்றொரு தலைநகரான தாம்பபாணியை ஆட்சி செய்தார். ஆனால் விரைவில் குவேனி தனது குழந்தைகளுடன் காட்டுக்கு விரட்டப்பட்டார்.

    புத்த மதத்தின் எழுச்சி

    இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்களில் பலர் ஏற்கனவே பௌத்தர்களாக இருந்திருக்கலாம். அசோகரின் மகன்கள் மகேந்திரன் மற்றும் சங்கமித்ரா ஆகியோர் கி.பி 250 இல் அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி செய்த தேவனாம்பியா திஸ்ஸா (கிமு 250 முதல் கிமு 210 வரை) காலத்தில் இலங்கைக்கு வந்தபோது பெரும்பாலான இலங்கையர்கள் புத்த மதத்திற்கு மாறினர்.

    கேரளாவுக்கு இயக்கர் இடம்பெயர்வு

    இலங்கையில் கலிங்கர்களின் ஆதிக்கம் நிறுவப்பட்ட பிறகு, ஈழவர் என்ற இயக்கர் கேரளாவுக்கு குடிபெயரத் தொடங்கினர். இது கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் அதாவது சங்க காலம் முடிந்த பிறகு இருக்கலாம். பண்டைய கேரளாவிலும் பௌத்தம் செழித்தது. குடியேறிய இயக்கர்களும் புத்த மதத்தினர். அவர்கள் அருகக் கடவுளை வணங்கினர். அருக அல்லது அர்ஹதன் என்பது புத்தரின் மாற்றுப் பெயர். 1335 இல் சேர வம்சத்தின் வீழ்ச்சி வரை ஈழவர் / இயக்கர் சேரன் வம்சத்தின் வில்லவர் / நாடாள்வாரிடமிருந்து தனித்தனியாக இருந்தார்கள்.

    ReplyDelete
  11. வில்லவர் மற்றும் இயக்கர்

    பிற்கால சேர வம்சம் (கி.பி. 800 முதல் கி.பி 1102 வரை)

    தமிழ் வில்லவர்களின் பிற்கால சேர வம்சத்தை வில்லவர், வானவர் மற்றும் மலையர் குலத்தினர் ஆதரித்தனர். சேர நாட்டில் யக்கர்பிற்கால சேரர் காலத்தில் சில பகுதிகளில், இயக்கர் அல்லது யக்கர் பிரபுக்கள் நிலப்பிரபுக்களாக ஆட்சி செய்தனர். எர்ணாகுளத்தில் உள்ள காக்கநாட்டிலும் குமாரநெல்லூர் மற்றும் புனலூரிலும் இயக்கர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இயக்கர் படையினர் அல்லது சேவகர்களாகப் பணியமர்த்தப்பட்டதாகத் தெரிகிறது. ஈழவர்கள் சேவகர் என்று அழைக்கப்பட்டனர்.


    பிற்கால சேர வம்சத்தின் முடிவு

    துளு-அரபு அச்சுறுத்தலைத் தொடர்ந்து பிற்கால சேர வம்சம் கி.பி 1102 இல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. வில்லவரின் பெரும்பகுதி மக்கள் கொல்லத்திற்கு குடிபெயர்ந்ததனர்.

    கி.பி 1120 இல் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் 350000 பேர் அடங்கிய நாயர் படையுடன் கேரளாமீது படையெடுத்து மலபாரை ஆக்கிரமித்தார். பாணப்பெருமாள் தனது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் அரசராகக் கொண்டு கண்ணூரில் துளு கோலத்திரி வம்சத்தை நிறுவினார். நாயர்கள் என்று அழைக்கப்படும் துளு-நேபாள நாகர்கள் மலபாரின் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களை ஆக்கிரமித்தனர். அக்காலத்தில் மலபாரில் ஒரு அரபு குடியேற்றம் நிறுவப்பட்டது.

    சேராய் வம்சம் (கி.பி 1102 முதல் கி.பி 1335 வரை)

    கி.பி 1102 இல் கொடுங்கலூர் சேரர்கள் கொல்லத்திற்கு இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, சேர வம்சம் கொல்லத்தின் ஆய் வம்சத்துடன் இணைந்தது. கி.பி 1156 முதல் 1335 வரை கேரளம் கொல்லம் சேரர்களால் ஆளப்பட்டது. தென் கேரளாவில் வில்லவர் சக்தி வாய்ந்தவராக இருந்தார்கள்.

    வில்லார்வட்டம் இராச்சியம் (கி.பி 1120 முதல் 1450 கி.பி.)

    மத்திய கேரளாவில் இருந்த வில்லவர் மற்றும் பணிக்கர் குழு வில்லார்வெட்டம் வம்சத்தை உருவாக்கினர். வைக்கம் அருகே உள்ள உதயனாபுரத்திலிருந்து சேந்தமங்கலத்திற்கு இடையே உள்ள பகுதிகளை வில்லார்வெட்டம் ராஜ்யம் ஆட்சி செய்தது. உதயம்பேரூர் எர்ணாகுளம், பரவூர், இளங்குன்னபுழ, வைபீன் ஆகியவை வில்லார்வட்டம் ராஜ்யத்தின் ஆட்சியின் கீழ் இருந்தன. கி.பி 1339 இல், வில்லார்வட்டம் அரசர் தம்முடைய குடிமக்களுடன் ஒரு கிறிஸ்தவராக மாறினார். இது கேரளாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. கி.பி 1450 இல் வில்லார்வட்டம் ராஜ்யத்தின் மேலாதிக்கம் கொச்சி ராஜ்யத்துடன் சேர்ந்த பணிக்கர்களாய பாலியத்து அச்சன்களுக்கு வழங்கப்பட்டபோது வில்லார்வட்டம் இராச்சியம் முடிவுக்கு வந்தது.

    வில்லார்வட்டம் ராஜ்யத்தின் கீழ் பரவூர், வைபீன் மற்றும் உதயம்பேரூர் ஆகியவை கிறிஸ்தவத்தின் முக்கிய மையங்களாக மாறின. வில்லார்வட்டம் பணிக்கர்கள் போர்த்துகீசியர்களுடன் சேர்ந்து ஒரு கலப்பின மெஸ்டிசோ சமூகத்தை உருவாக்கினர், பின்னர் அந்த சமூகம் சிரியன் கிறிஸ்தவத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.

    மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 மாலிக் காஃபூர் படையெடுப்பைத் தொடர்ந்து, அனைத்து தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. சேராய் மன்னர் ரவிவர்மா குலசேகரன் காஞ்சிபுரத்தில் திரிபுவனசக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டாலும், கிபி 1314 இல் துருக்கியர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்

    கோலத்திரியின் எழுச்சி

    அரபு மற்றும் துருக்கியர்களின் ஆதரவுடன் கண்ணூரின் துளு ஆட்சியாளர் கோலத்திரி கேரளாவின் உச்ச தலைவரானார்.1314 ஆம் ஆண்டில் அவர் ஆற்றிங்கல் ராணி மற்றும் குன்னுமேல் ராணிகள் என்ற இரண்டு துளு இளவரசிகளை வேணாட்டை ஆள்வதற்காக வேணாட்டுக்கு அனுப்பினார். கி.பி 1335 இல் மதுரை சுல்தானகம் நிறுவப்பட்டபோது, ​​அஹிச்சத்திரத்திலிருந்து நம்பூதிரிகள் மற்றும் நாயர்கள் என்ற துளு-நேபாள ஆரிய-நாகா குடியேற்றக்காரர்கள் கேரளாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.


    கடைசி தமிழ் வில்லவர் ஆட்சியாளர்

    கடைசி சேர ஆட்சியாளர் வீர உதயமார்த்தாண்டா வர்மா வீர பாண்டியன், பாண்டியன் தாய்க்கு பிறந்த சேராய் மன்னர் ரவிவர்மா குலசேகரனின் மகன். அவர் ஆற்றிங்கல் மற்றும் குன்னுமேல் ராணிகளால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடைசியான தமிழ் வில்லவர் ஆட்சியாளர் உதயமார்த்தாண்ட வர்மாவின் ஆட்சி கி.பி 1335 இல் மதுரை சுல்தானேட் நிறுவப்பட்ட போது முடிவடைந்தது. குன்னுமேல் ராணியின் மகன் குன்னுமேல் ஆதித்ய வர்மா கி.பி 1335 இல் வேணாட்டில் ஒரு துளு தாய்வழி வம்சத்தை நிறுவினார்.

    ReplyDelete
  12. வில்லவர் மற்றும் இயக்கர்

    ஈழவரோடு சேர்ந்த வில்லவர்

    கி.பி 1335 இல் தமிழ் ராஜ்ஜியங்கள் வீழ்ச்சியடைந்த பிறகு சில வில்லவர், பணிக்கர் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழவர்களுடன் இணைந்தனர். பணிக்கர்களும் சண்ணாரும் ஈழவர்களிடையே பிரபுத்துவமாக கருதப்பட்டனர். ஆனால் ஈழவருடன் சேர்ந்த வில்லவர் ஈழவரின் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தனர். இருபதாம் நூற்றாண்டில் சண்ணார்களும் பணிக்கர்களும் ஈழவரின் மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர்.


    வில்லவரின் இடம்பெயர்வு

    கி.பி 1335 இல் சேராய் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, வில்லவர்-நாடாழ்வார் மக்கள் தெற்கே திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு குடிபெயர்ந்தனர். கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள கோட்டையடி கேரளாவின் வில்லவரால் கட்டப்பட்ட கடைசி கோட்டையாக இருக்கலாம். கி.பி.1610 வரை வில்லவர் இறையாண்மையைக் கொண்டிருந்தனர்.

    அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் வில்லவர் வம்சங்களாகிய சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் அறுதிதெற்கிற்கு குடிபெயர்ந்தனர். களக்காட்டில் சோழர்கள் கோட்டையையும், கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் பாண்டியர்கள் கோட்டைகளையும் கட்டினார்கள்.

    கி.பி 1610 இல் கொச்சியின் வெள்ளாரப்பள்ளி கோவிலகத்தைச் சேர்ந்த ஒரு துளு-நேபாள பிராமண வம்சம் போர்த்துக்கேயர் காலத்தில் வேணாட்டின் ஆட்சியாளர்களாக நிறுவப்பட்டனர். இந்தக் காலத்திற்குப் பிறகு வில்லவர் கீழ் அடுக்குக்குத் தள்ளப்பட்டனர்.

    முடிவுரை

    வில்லவரும் இயக்கரும் முற்றிலும் மாறுபட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். வில்லவர் திராவிட தமிழினத்தைச் சேர்ந்தவர்கள். இயக்கர் இலங்கை பௌத்தர்கள் ஆயிருந்தார்கள். ஆனால் பிற்கால சேர வம்சத்தின் ஆட்சியின் போது, ​​இயக்கர் இராணுவத்தில் வீரர்களாகவும் நிலப்பிரபுக்களாகவும் நியமிக்கப்பட்டனர், அவர்கள் சேர வம்சத்தை ஆதரித்தனர். கி.பி 1335 இல் தமிழ் வம்சங்கள் வீழ்ச்சியடைந்த பின்னரே ஈழவருடன் வில்லவர் கலப்பு ஏற்பட்டது.
    மத்திய கேரளாவில் பெரும்பாலான வில்லவர்களும் தெற்கே குடிபெயர்ந்தனர் அல்லது போர்த்துகீசியர்களுடன் சேர்ந்தனர். எஞ்சியிருந்த பணிக்கர்களும் சண்ணார்களும் ஈழவர்களுடன் சேர்ந்துள்ளனர். நாடாழ்வார் மற்றும் ஈழவருக்கு பொதுவான தோற்றம் இல்லை ஆனால் சில பகுதிகளில் சமீப காலங்களில் கலப்பு உள்ளது..

    ReplyDelete
  13. பந்தளத்தின் வில்லவர் பாண்டியர்கள் மற்றும் நம்பூதிரி பாண்டியர்கள்

    தமிழ் பாண்டிய ஆட்சியின் முடிவு

    1700களில் பந்தளத்தின் அசல் தமிழ் வில்லவர்-மீனவர் பாண்டியன் வரிசை முடிவுக்கு வந்தது. தமிழ் பாண்டிய வம்சம் தமிழ் வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. தமிழ் பாண்டிய இராச்சியம் வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் குலங்களால் ஆதரிக்கப்பட்டது.

    பந்தளம் நம்பூதிரி பாண்டியன் வம்சம்

    1700 களின் பிற்பகுதியில் நம்பூதிரி வம்சத்தினர் பந்தளம் பாண்டிய பிரதேசங்களை ஆக்கிரமித்து தங்களை பாண்டியர்கள் என்று அழைக்கத் தொடங்கினர். பந்தளத்தின் நம்பூதிரி பாண்டிய வம்சத்தினர் தங்களை "ராஜா" என்று அழைத்துக் கொள்கின்றனர். நம்பூதிரி பாண்டியர்கள் பார்ப்பனர்களின் பார்கவ குலத்தைச் சேர்ந்தவர்கள். கேரளாவின் மற்ற துளு-நேபாள வம்சங்களைப் போலவே மன்னர்கள் தங்கள் பெயருக்கு முன் பிறந்த நட்சத்திரத்தை சேர்க்கிறார்கள் உதாரணமாக "அஸ்வதி திருநாள்" கோதவர்மா. பந்தளத்தைச் சேர்ந்த நம்பூதிரி பாண்டியர்கள் சுத்த சைவ உணவு உண்பவர்கள்.
    நம்பூதிரி பாண்டியர்கள் பதினோரு வயதில் உபநயனம் செய்து வாழ்நாள் முழுவதும் புனித நூலை (பூணூல்) அணிவார்கள்.
    தற்போதைய பந்தளம் பாண்டியர்களின் தந்தை, தாத்தா மற்றும் அவர்களின் முன்னோர்கள் அனைவரும் நம்பூதிரி பிராமணர்கள் ஆவர். நம்பூதிரி பாண்டியர்கள் பாண்டியர்களாக வேடம் போடுகிறார்கள் ஆனால் அவர்கள் இனரீதியாக மதுரை பாண்டிய வம்சத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல.

    வில்லவர் பாண்டியன் மற்றும் நம்பூதிரி பாண்டியன்

    வில்லவர் பாண்டியன்

    1. திராவிடர்கள்

    2.கொற்கை மற்றும் மதுரையை சேர்ந்த வில்லவர்-மீனவர் மக்கள்

    3. பட்டங்கள் மாறவர்மன், சடையவர்மன், மாறன், வில்லவன், மீனவன்

    4. தமிழ் வேர்கள்

    5. அசைவம்

    6. மகாபலியின் வம்சாவளி

    7. பாண்டியர்கள் அனைத்து திராவிட மக்களுக்கும் நண்பர்கள்.

    8. மலை அரையர்களின் நண்பர்கள்

    9. பாண்டியர்கள் ஹிரண்யகர்ப சடங்குகளை நடத்தினர்

    10. வில்லவர், மலையர், வானவர், மீனவர் போன்ற பூர்வகுடி திராவிட குலத்தாரால் ஆதரிக்கப்பட்டது.

    நம்பூதிரி பாண்டியர்கள்

    1. ஆரியன்

    2.பார்கவகுலம் நேபாள வேர்களைக் கொண்ட துளுவ பிராமணர்கள்.

    3. பட்டங்கள் ராஜா, கோதவர்மா. பெயர்களுடன் பிறந்த நட்சத்திரத்தை சேர்ப்பார்கள்.

    4. இந்திய-நேபாள எல்லையில் உள்ள அஹிச்சத்திரத்தில் இருந்து வந்த துளு-நேபாள மக்கள்.

    5. சைவம்

    6. பரசுராமன், பார்கவராமனின் வம்சாவளி

    7. திராவிட எதிர்ப்பு

    8. மலை அரையர்களை துன்புறுத்தினார்கள்

    9. உபநயன விழா நடத்துகிறார்கள். அவர்கள் புனித நூலை அணிவார்கள்.

    10. அஹிச்சத்திரத்தில் இருந்து குடியேறிய நாகர்களாகிய நாயர்களால் ஆதரிக்கப்பட்டார்கள்.

    இப்படி பந்தளத்தில் ஒருபோதும் தமிழ் பேசாத நம்பூதிரிகள் தங்களை பாண்டியர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்..

    ReplyDelete
  14. வில்லார்வெட்டம் இராச்சியம்

    வில்லார்வட்டம் அல்லது வில்லார்வெட்டம் இராச்சியம் ஒருவேளை கேரளாவின் தமிழ் வில்லவர் சேர வம்சத்தின் ஒரு துணைக்குழு மற்றும் கிளையாக இருக்கலாம். பண்டைய சேர துணைக்குழுக்கள் இரும்பொறை, உதியன், வேளியர், புறையர் போன்றவை.

    துளு படையெடுப்பு

    கிபி 1120 இல் 350000 பலமான நாயர் படையுடன் கேரளாவைத் தாக்கிய பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளரைத் தொடர்ந்து கொடுங்களூரில் பிற்கால சேர வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சேர தலைநகரம் கொடுங்களூரில் இருந்து கிபி 1102 இல் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது.
    கண்ணூரில் துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் அவரது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் ஆட்சியாளராகக் கொண்டு ஒரு தாய்வழி சாம்ராஜ்யம் கபி 1156 இல் நிறுவப்பட்டது. கேரளாவை ஆக்கிரமித்தவர்கள் துளுநாட்டைச் சேர்ந்த பாணர்கள், ஆரியர்கள் மற்றும் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்ராவைச் சேர்ந்த நாகர்கள்(நாயர்கள்). இந்தப் படையெடுப்பிற்குப் பிறகு, பிற்கால சேர வம்சத்தின் வில்லவர் தங்கள் அரசை கொல்லத்திற்கு மாற்றினர்.

    வில்லார்வட்டம் இராச்சியம்

    எனினும் கொச்சியில்  வில்லார்வட்டம் என்றழைக்கப்படும் சேர குலத்தினர் 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆட்சி செய்து வந்தனர். வில்லார்வட்டம் இராச்சியம் உதய ஸ்வரூபம் என்று அழைக்கப்பட்டிருந்தது, இது வில்லவர்களின் உதியன் சேரலாதன் துணைக்குழுவில் தோன்றியதைக் குறிக்கிறது. உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து கேரளாவை ஆண்டவர்கள்.

    மாலிக் காஃபூரின் தாக்குதல்

    1311 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு அனைத்து தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. கிபி 1335 இல் மதுரை சுல்தானகம் ஆட்சிக்கு வந்தபோது நான்கு தாய்வழி துளு-நேபாள ராஜ்ஜியங்கள் நிறுவப்பட்டன. கோலத்திரி, சாமுத்திரி, கொச்சி மற்றும் வேணாட்டில் உள்ள ஆற்றிங்கல் ராணி ஆகிய நான்கு தாய்வழி அரசுகள்.


    துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளின்
    சகோதரியின் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நம்பூதிரி வம்சம் கொச்சி இராச்சியத்தில் ஆட்சியாளர்களானார். நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் அஹிச்சத்திராவின் தலைநகரிலிருந்து கடலோர கர்நாடகாவின் துளுநாட்டுக்கு குடியேறியவர்கள். கி.பி 1311க்குப் பிறகு கேரளாவை துளு-நேபாள மக்கள் ஆட்சி செய்தனர், அவர்கள் தாய்வழி , பலகணவருடைமை
    மற்றும் நாக வழிபாட்டைக் கடைப்பிடித்தனர். அவர்கள் நேபாள சொற்களஞ்சியத்துடன் பேசினார்கள் மற்றும் திகளரி எழுத்துக்களில் (துளு எழுத்து) எழுதினார்கள்.

    கிறிஸ்துவ மதத்திற்கு மாறுதல்

    வில்லார்வட்டம் மன்னர் கி.பி 1338க்குப் பிறகு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கலாம். ஜோர்டானஸ் கேடலனஸ் எழுதிய 1329 முதல் 1338 வரையிலான நிகழ்வுகளை மிராபிலியா டிஸ்கிரிப்டாவில் விவரிக்கிறார். ஜோர்டானஸ் கிபி 1330 இல் காணாமல் போனார். ஜோர்டானஸ் ப்ரெஸ்டர் ஜான் அல்லது இந்தியாவில் எந்த கிறிஸ்தவ ராஜ்ஜியமும் இருப்பதைக் குறிப்பிடாததால் வில்லார்வட்டம் மன்னரின் மதமாற்றம் கி.பி 1338 க்குப் பிறகு நிகழ்ந்திருக்கலாம்.

    போப்பிற்கு கடிதம்

    வில்லார்வட்டம் மன்னர் எடெசா மூலம் கி.பி 1350 இல் ஐரோப்பிய சக்திகளிடம் இருந்து உதவி கோரி போப்பிற்கு கடிதம் அனுப்பினார். போப் அந்த கடிதத்தை போர்த்துகீசிய மன்னருக்கு அனுப்பினார்.

    ReplyDelete
  15. வில்லார்வெட்டம் இராச்சியம்

    பாலியத்து அச்சன்

    வில்லார்வட்டம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சில பணிக்கர்களும் நாயர்களுடன் சேர்ந்து பெரும்படப்பு ஸ்வரூபத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். ஒரு பணிக்கர் குடும்பத்திற்கு சேந்தமங்கலம் பகுதி வழங்கப்பட்டது, பின்னர் அவர்கள் கி.பி 1450 இல் பாலியத்து அச்சன் என்று அழைக்கப்பட்டனர். வில்லார்வட்டம் ராஜ்ஜியம் பாலியத்து அச்சனுக்கு வழங்கப்பட்டது. கொடுங்களூர் குஞ்சுக்குட்டன் தம்புரான் எழுதிய கோகில சந்தேசத்தில் வில்லார்வட்டம் மன்னனின் இந்த அரியணைப் பதவி பறிக்கப்பட்டது கூறப்படுகிறது. கிபி 1585 வரை பாலியம் வம்சத்தினர் மன்னர்களாக ஆட்சி செய்தனர். கடைசி மன்னர் ராமவர்மா மற்றும் அவரது மகன் பாலியத்து கோமி அச்சன் கொச்சியின் பிரதமரானார். 1450 களில் கொச்சி மன்னர்கள் உதயம்பேரூருக்கு அருகிலுள்ள சில பகுதிகளைத் தவிர வில்லார்வட்டம் முழுவதையும் முழுமையாகக் கைப்பற்றினர். வில்லார்வட்டம் தலைவர்கள் அரச அந்தஸ்தை இழந்தனர்.

    வில்லார்வட்டம் அரசு போர்ச்சுகீசியரின் காலம்

    கிபி 1498 இல் போர்த்துகீசியர்கள் வந்தபோது, ​​​​வாஸ்கோடகாமாவுக்கு சிரிய கிறிஸ்தவர்களால் வில்லார்வட்டம் மன்னரின் செங்கோல் மற்றும் வாள் வழங்கப்பட்டது. நம்பூதிரி உடையில், தோளில் சால்வை அணிந்து, குடையும் ஏந்தியபடி, நம்பூதிரி உடையில், கிறிஸ்தவர்கள் குழு ஒன்று வாஸ்கோடகாமாவை சந்தித்தது. கேரளா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தங்களின் கோட்டையான உதயம்பேரூரில், கோட்டை கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஒரு சக்திவாய்ந்த இந்திய கிறித்துவ மன்னரை எதிர்பார்த்த போர்த்துகீசியர்கள் அவர்களின் கோரிக்கையை நிராகரித்தனர்.

    வாஸ்கோ டா காமா

    வில்லார்வட்டம் தலைவர்கள் கொச்சி இராச்சியத்தில் இருந்து இழந்த தங்கள் நிலங்களை மீட்க வாஸ்கோடகாமாவின் உதவியை நாடினர். வில்லார்வட்டம் மன்னர்கள் குட்டி நிலப்பிரபுக்கள் என்பதை வாஸ்கோடகாமா உணர்ந்தார். போர்த்துகீசியர்கள் வில்லார்வட்டம் மன்னர்கள் தங்கள் பிரதேசத்தை மீட்டெடுக்க எதுவும் செய்யவில்லை. சேந்தமங்கலம் கத்தோலிக்க செமினரி மற்றும் வைபீகோட்டா செமினரி ஆகியவை வில்லார்வட்டம் வம்சத்திற்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டு அங்கேகோவா மற்றும் கொச்சினுக்கு அடுத்தபடியாக மூன்றாவது அச்சகம் தொடங்கப்பட்டது.

    பணிக்கர் இராணுவம்

    கேரளாவிற்கு வந்த 150 போர்த்துகீசியர்கள் ஒரு சக்திவாய்ந்த இராணுவத்தை உடனடியாக நிறுவ முடிந்தது, ஏனெனில் கேரளாவின் பாரம்பரிய இராணுவ பயிற்சியாளர்களான பணிக்கர்கள் போர்த்துகீசியருடன் சேர்ந்து இறுதியில் ஒரு மெஸ்டிசோ சமூகம் உருவாக்கப்பட்டது. ஆரம்பகால பணிக்கர்கள் வில்லார்வட்டம் இராச்சியத்தைச் சேர்ந்தவர். மூவாற்றுப்புழா அருகே உள்ள பெரிங்குழாவில் தளபதிகளான வள்ளிக்கடப் பணிக்கர்களின் கீழ் ஒரு கோட்டை கட்டப்பட்டது. விரைவில் போர்த்துகீசியர்கள் உள்ளூர் ராஜ்ஜியங்களை கிறிஸ்தவமயமாக்கப்பட்ட பணிக்கர்களையும் மெஸ்டிசோக்களையும் கொண்டு கட்டுப்படுத்தினர். வள்ளிக்கடைப் பணிக்கர்கள் இனத்தால் நாடார்கள் ஆவர்.

    மெனசஸ் மற்றும் உதயம்பேரூர்

    1599 இல் கொச்சி மன்னர் கிறிஸ்துவ மதத்திற்கு மாற வேண்டும் என்று பேராயர் மெனெசஸ் விரும்பினார். ஆனால் கொச்சி மன்னர் அவரைத் தவிர்த்துவிட்டு, மூத்த வில்லார்வட்டம் தலைவரை தம்பான் அல்லது தம்புரான் அந்தஸ்துக்கு உயர்த்த முன்வந்தார், இதனால் மெனெசஸ் அவரை கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார். வில்லார்வட்டம் மன்னர்கள் இந்துக்கள் அல்லது அதிகாரப்பூர்வமாக கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை இது மீண்டும் குறிக்கிறது. ஜோசப் சிமோனியஸ் அசெமனஸ் தனது பைப்ளியோதீக்கா ஓரியன்றாலிஸ் இல் குறிப்பிடுகையில், கடைசி அரசருக்கு ஆண் வாரிசு இல்லாதலால், பெலியார்தே ராஜ்யம் கிறிஸ்தவர்களிடமிருந்து டயம்பரின் கிறிஸ்தவர் அல்லாத மன்னர்களுக்குச் சென்றது என்று. எனவே அதே வில்லார்வட்டத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சேந்தமங்கலத்தில் இருந்தும், அவர்களின் இந்து உறவினர்கள் உதயம்பேரூரில் இருந்தும் ஆட்சி செய்தனர். ஆனால் வில்லார்வட்டம் குடும்பத்தின் மூத்த உறுப்பினரைச் சந்தித்த மெனெசஸ் அவர்கள் கத்தோலிக்கர்கள் இல்லையென்றாலும் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட கிறிஸ்தவர்கள் என்று கூறுகிறார். உதயம்பேரூர் வில்லார்வட்டம் குடும்பத்தில் சிலர் நெஸ்டோரியர்களாகவும், மற்றவர்கள் இந்துக்களாகவும் இருந்திருகலாம்.

    ஞானஸ்நானம்

    1599இல் உதயம்பேரூரின் வில்லார்வட்டம் மன்னர்  சேந்தமங்கலம் செமினரியில் பிஷப் மெனெசஸால் வில்லார்வட்டம் தோம ராஜாவு என ஞானஸ்நானம் பெற்றார். ஒருவேளை அவர் குடும்பத்தில் இருந்து முதல் ரோமன் கத்தோலிக்கராக இருக்கலாம்.

    ReplyDelete
  16. வில்லார்வெட்டம் இராச்சியம்

    டச்சு காலம்

    1653 இல் டச்சுக்காரர்கள் வந்தபோது வில்லார்வட்டம் குடும்பம் கத்தோலிக்கர்களாயதினால் செயலிழந்தனர். உதயம்பேரூர் பரம்பரையின் கடைசி மன்னர் ராஜா தோமா ஆவார், அவர் 1701 இல் இறந்தார், அவர் தனது முன்னோர்களால் கட்டப்பட்ட பழைய தேவாலயமான உதயம்பேரூர் பழே பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டார்.

    பிற்கால வில்லார்வட்டம் தலைவர்கள்

    சில வில்லார்வட்டம் தலைவர்கள் 18 ஆம் நூற்றாண்டு வரை இருந்தனர். கிரந்தாவரியின் படி 1713 இல் வில்லார்வட்டம் அடூர் கிராமத்தைத் தாக்கி சூறையாடியது. அவர்கள் கோயிலை அழித்து, பிராமணர்களைத் துன்புறுத்தி, கோயிலின் படகைக் கைப்பற்றினர். பெருமுண்டமுக்கில் இருந்த நெடுங்கநாட்டு நம்பிடி அச்சன்களை அதிகாரத்திலிருந்து அகற்றினர். அவர்களுக்கு டச்சு ஆதரவு இருந்திருக்கலாம். அதன் பிறகு அவர்கள் வரலாற்றில் இருந்து மறைந்தனர்.

    வில்லார்வெட்டம் வம்சத்தின் வேர்கள்.

    சங்க காலத்தில் உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து ஆட்சி செய்தது. வேம்பநாட்டுக் காயலுக்கு அருகிலுள்ள உதயனாபுரம், உதியன் சேரலாதன் வழித்தோன்றல்களின் தலைநகராக இருந்திருக்கலாம். பிற்காலத்தில் உதயம்பேரூர் மற்றும் சேந்தமங்கலம் ஆகியவை வில்லார்வெட்டம் சமஸ்தானத்தின் தலைநகரங்களாக விளங்கின. உதய ஸ்வரூபம் என்பது வில்லவர்களின் வில்லார்வெட்டம் வம்சத்தின் மாற்றுப் பெயராகும்.

    ReplyDelete
  17. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பந்தளத்தின் பாண்டிய இளவரசன் அய்யப்பன் தலைமையில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நாயக்கர் படையைத் தோற்கடித்தனர். மதுரை திருமலை நாயக்கர் கி.பி.1623ல் மறவர் தலைவனும் கொள்ளைக்காரனுமான உதயணன் தலைமையில் ஒரு கொள்ளைப் படையை அனுப்பினார். உதயணனும் அவனது படையும் 17 வருடப் போராட்டத்திற்குப் பிறகு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

    அர்த்துங்கல் தேவாலயம்

    செயின்ட் ஆண்ட்ரூ பேராலயம், அர்த்துங்கல் அரபிக்கடலை நோக்கிய கடற்கரையோரத்தில் கேரளாவின் சேர்த்தலையில் உள்ள அர்த்துங்கலில் அமைந்துள்ளது. அர்த்துங்கல் தேவாலயம் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துகீசியர் காலத்தில் கட்டப்பட்டது. இது 1584 இல் விகார் ஜாகோமோ ஃபெனிசியோ என்ற இத்தாலிய ஜேசுயிட் பாதிரியாரால் மீண்டும் கட்டப்பட்டது. பக்தர்கள் இவரை "அர்த்துங்கல் வெளுத்தச்சன்" என்று அழைத்தனர். திருத்தந்தை. ஜியாகோமோ ஃபெனிசியோ (கி.பி. 1558 - கி.பி. 1632), லத்தீன் மொழியில் இந்து மதத்தைப் பற்றிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதுவதற்காக இந்து மதத்தைப் படித்த முதல் ஐரோப்பிய மிஷனரி ஆவார். இந்து கலாச்சாரத்திலும், சீரப்பஞ்சிற பணிக்கர்களிடம் கற்றுக்கொண்ட களரிப்பயற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

    அர்த்துங்கல் வெளுத்தச்சன்

    அர்த்துங்கல் வெளுத்தச்சன் அர்த்துங்கல் தேவாலயத்தின் விகாரியாக இருந்தபோது, ​​சேர்த்தலையின் லத்தீன் கத்தோலிக்கர்களும் உதயணனுக்கு எதிரான போரில் இணைந்தனர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் முகம்மாவிலேயே புகழ்பெற்ற சீரப்பஞ்சிற களரியில் பயிற்சி பெற்றவர் என்றும் புகழ் பெற்றவர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் அவரது லத்தீன் கத்தோலிக்கர்கள் ஐயப்பனின் ஆதரவாளர்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் திருமலை நாயக்கர் காலத்தில் நடந்த நிகழ்வுகள் அதாவது கி.பி.1623 முதல் 1659 வரையிலான காலகட்டத்தில், அர்த்துங்கல் வெளுத்தச்சன் மிகவும் வயதானவராக இருந்திருக்கலாம். அர்த்துங்கல் வெளுத்தச்சன் கிபி 1632 இல் காலமானார்.

    கி.பி.1632ல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் ஐயப்பன் சுவாமி ஒரு இளைஞராக இருந்தார். எனவே உதயணனுடன் ஐயப்பன் செய்த போர் கி.பி.1632 முதல் 1640 வரையிலான காலகட்டத்தில் நடந்திருக்கலாம். நாயக்கர் படையெடுப்பிற்கு பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு உதயணன் கொல்லப்பட்டதாக வாய்மொழி மரபுகள் கூறுகின்றன.

    புனித செபாஸ்டியன் சிலை

    கி.பி 1747 இல் புனித செபஸ்தியார் சிலை நிறுவப்பட்ட போது, ​​பல உள்ளூர் பக்தர்கள் சிலையை வெளுத்தச்சன் என்றும் அழைக்கத் தொடங்கினர்.

    ஆலங்காடு யோகம்

    ஐயப்ப ஸ்வாமி ஆலங்காடு தலைவர் ஞாலூர் கர்த்தா, காம்பிள்ளி பணிக்கர் மற்றும் முல்லப்பிள்ளி நாயர் ஆகியோர் முன்னிலையில் அர்த்துங்கல் வெளுத்தாவுடன் ஆலுவாவில் உள்ள பெரியாறு கரையில் ஆலங்காட்டு வீரர்களுக்கு உரையாற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எருமேலியில் மலைப்பாங்கான நிலப்பரப்பில் ஏறிச் செல்லும் போது 'சரணம் ஐயப்பா' என்று முதன்முதலில் முழக்கமிட்டவர் காம்பிள்ளி பணிக்கர் ஆவார். முதல் வெளிச்சப்பாடு அல்லது தேவ வாக்கு கூறுபவர் இவரே ஆவார். ஆலுவாவில் உள்ள பாரூர்கவலயிலிருந்து இடதுபுறம் போகும்போது ஆலங்காட்டுக்கு அருகில் உள்ள இடம் காம்பிள்ளி.

    அம்பலப்புழா யோகம்

    அம்பலப்புழா பழமையான பாண்டிய துறைமுக நகரமான புறக்காடு அருகே உள்ளது. பழங்காலத்தில் வேம்பநாட்டுக் காயலுக்கு தெற்கே உள்ள அனைத்து பகுதிகளும் பாண்டிய வம்சத்தின் கீழ் இருந்தன. கி.பி 77 இல் முசிறிக்குச் சென்ற பிளினி, மோதுராவின் மன்னன் பாண்டியோன் ஆட்சி செய்த நகரமான பரேகே-புறக்காட்டில் மிளகு வாங்க உள்ளூர் மக்களால் வற்புறுத்தப்பட்டார்.

    எருமேலியில் வாவர் தலைமை தாங்கிய ஐயப்பன் படையில் சேர்வதற்காக இங்கிருந்து ஒரு பணிக்கர் படை புறப்பட்டது. அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் எருமேலியில் அம்பலப்புழா யோகம் பக்தர்களால் பேட்ட துள்ளல் என்ற புனித சடங்கு நடனம் ஆடப்படுகிறது.

    ReplyDelete
  18. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    வாவர் பள்ளி

    அய்யப்பனின் நெருங்கிய நண்பரான வாவர் பாத்தும்மா - செய்தாலி தம்பதியரின் மகன். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எருமேலி நைனார் ஜும்மா மசூதிக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த பள்ளிவாசல் வாவரின் மசூதியாக கருதப்படுகிறது. அவர்கள் மசூதியின் தொழுகை மண்டபத்திற்குள் நுழையாமல் மசூதியையும், ஓய்வெடுப்பதற்குரிய இடத்தையும் சுற்றி வருகின்றனர். இங்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்யவும், காணிக்கை, பிரசாதம் வழங்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    சபரிமலையில் வாவர்நடை என்று அழைக்கப்படும் மற்றொரு வழிபாட்டுத்தலம் உள்ளது, அங்கு வாவர் சிலை இல்லை, ஆனால் செதுக்கப்பட்ட கருங்கல் பலகை மற்றும் ஒரு பழைய வாள் மட்டுமே உள்ளன. வாவர் ஒரு முஸ்லிமாக இருந்ததால் ஒரு முஸ்லிம் மதகுரு தினசரி தொழுகை நடத்துகிறார். இங்கும் ஐயப்ப பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடம் திருவிழா பேட்டத்துள்ளல் எனப்படும் சடங்கு நடனத்தின் முன்னோடியாக நடத்தப்படுகிறது. எருமேலி நைனார் ஜும்மா மஸ்ஜித் 1970 களில் கோபாலகிருஷ்ணன் என்ற இந்து கட்டிடக் கலைஞரால் மீண்டும் கட்டப்பட்டது.

    மணிகண்டன்

    மணிகண்டன் மலை அரையர் குலத்தைச் சேர்ந்தவர். கரிமலை அரையன் கந்தன் மற்றும் அவரது மனைவி கருத்தம்மா ஆகியோரின் மகன் மணிகண்டன் என்று மலை அரையர்கள் கூறுகின்றனர். மணிகண்டன் பாண்டிய மன்னன் 1610 களில் கொள்ளையர்களிடமிருந்து வந்தபோது அவரைப் பாதுகாத்தார். மணிகண்டன் பாண்டிய இளவரசி மாயாவதியை உதயணனிடம் இருந்து மீட்டார். மலை அரையர்கள் மணிகண்டனுக்கு சன்னதி அமைத்து வழிபட்டனர். பிற்காலத்தில் அய்யப்பன் மணிகண்டனின் அவதாரமாகக் கருதப்பட்டு, மலை அரையர்களால் வழிபடப்பட்டார்.

    கி.பி 1623 வாக்கில் பல்வேறு இனத்தவர்களின் உதவியோடு உதயணனை மணிகண்டன் தோற்கடித்தார். மணிகண்டன் தலைமையிலான படைகள் பாண்டிப்படை, ஆலங்காட்டுப்படை, அம்பலபுழப்படை, சீரப்பஞ்சிறப்படை, மல்லன், வில்லன், வலியக்கடுத்தா, கொச்சுகடிதா, வாவர், நஸ்ரானிகள், அர்த்துங்கல் வெளுத்தச்சன் என்ற ஜாகோமோ ஃபெனிசியோ என்ற ஒரு இத்தாலிய ஜெசுயிட் பாதிரியார் போன்றவர்கள்.

    வலிய கடுத்த ஸ்வாமி

    அய்யப்பனின் உதவியாளரான வலிய கடுத்த ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய சன்னதி புனித படிகளின் இடது பக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது. வலிய கடுத்தா ஒரு மலை அரையர் பழங்குடித் தலைவர் ஆவார், அவர் நாயக்கர் இராணுவத்திற்கு எதிராக மலை அரையர் படைகளை வழிநடத்தினார்.

    மலை அரையர்

    மலை அரையர், சேர வம்சத்தை ஆதரித்த மூன்று பெரிய வில்லவர் பழங்குடியினரில் ஒன்றான மலையர் குலத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம். ஐயப்பனின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்த மலை அரையர் 1904 ஆம் ஆண்டு வரை ஐயப்பன் கோவிலின் பூசாரிகளாகவும் உரிமையாளராகவும் இருந்தனர். இருபதாம் நூற்றாண்டு வரை ஒத்திசைவான நம்பிக்கை மற்றும் மத சகிப்புத்தன்மை நிலைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

    1800களில் பந்தளம் நம்பூதிரி பாண்டிய மன்னர்களால் மலை அரையர்கள் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சபரிமலை மற்றும் சபரிமலையைச் சுற்றியுள்ள பதினேழு மலைகளிலிருந்து மலை அரையர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    மலை அரையர்கள் கூலியின்றி ஏலக்காயை மலைகளில் இருந்து சமவெளிக்கு கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கி.பி 1856 இல் மலை அரையர்கள் நாயர் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்து தாக்கினர்.

    மலை அரையர்களின் கிறிஸ்துவ மதமாற்றம்

    மலை அரையர்களை துன்புறுத்தியது பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வழிவகுத்தது. மலை அரையர்களில் பாதி பேர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஸிஎம்எஸ் மிஷனரி தந்தை ஹென்றி பேக்கர் 1840 முதல் 1862 வரை அவர்களிடையே பணியாற்றினார். தந்தை.ஹென்றி பேக்கர், ஹில் அரியன்ஸ் ஆஃப் திருவாங்கூர் என்ற புத்தகத்தை எழுதினார்.1879 இல் மலை அரையர்களில் சுமார் 2000 கிறிஸ்தவர்கள் இருந்தனர்.

    திராவிடப் பாணி வழிபாடு

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கி.பி.1904 வரை திராவிட வழிபாட்டு முறைகளை மலை அரையர் பூசாரிகள் நடத்தி வந்தனர். அவர்களின் முக்கிய வழிபாடு தேன் மற்றும் நெய் கொண்டு அபிஷேகம். சமீப காலம் வரை மலை அரையர்களின் "தேனாபிஷேகம்" வழிபாடு அனுமதிக்கப்பட்டது. சில தசாப்தங்களுக்கு முன், தந்திரிகள் இந்த வழிபாட்டை நிறுத்தினர்.

    ReplyDelete
  19. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    1904ல் கட்டப்பட்ட புதிய சபரிமலை கோவில்

    சபரிமலை கோயில் போளச்சிறக்கல் கொச்சும்மன் முதலாளி என்ற கிறிஸ்தவ கட்டிட ஒப்பந்ததாரரால் கட்டப்பட்டது. மலை அரையர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சபரிமலை கோவில் கி.பி.1900ல் மர்மமான முறையில் தீயில் எரிந்து நாசமானது.
    சபரிமலை கோவிலை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் அரசரிடம் இருந்து கொச்சும்மன் முதலாளி கி.பி.1900ல் பெற்றார்.
    கி.பி.1904ல் கொல்லத்தில் கட்டுமானப் பணி தொடங்கியது. அஷ்டமுடிக் காயல் கரையில் மரம் மற்றும் கல் பாகங்களைக் கொண்டு கோயில் அமைக்கப்பட்டு, பின்னர் சபரிமலைக்கு மாற்றப்பட்டது. கொச்சும்மன் முதலாலி 1907 இல் இறந்தாலும், சிரியன் ஆர்த்தடாக்ஸ் பாதிரியாராக இருந்த அவரது மருமகன் ஸ்கரியா கத்தனார் சபரிமலை கோயிலின் கட்டுமானப் பணிகளை முடித்தார்.

    தாழமண் மடம் தந்திரி குடும்பம்

    1904 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கு பிராமணர்களின் ஒரு குடும்பத்தை அர்ச்சகர்களாக நியமித்தார், அவர்கள் செங்கன்னூரில் குடியேறினர். தாழமண் மடம் தந்திரி குடும்பம் என்று அழைக்கப்படும் இந்த குடும்பம் கி.பி 1904 முதல் சபரிமலையில் அர்ச்சகராக இருக்க பரம்பரை உரிமை பெற்றுள்ளது.
    சுதந்திரத்திற்குப் பிறகும் சபரிமலையில் தந்திரிகளாக வேறு எந்த அர்ச்சகர் குடும்பமும் அனுமதிக்கப்படவில்லை.

    பிராமண மேலாதிக்கம்

    இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு மலை அரையர்கள் ஓரங்கட்டப்பட்டனர். சீரப்பஞ்சிற பணிக்கர்கள் புறக்கணிக்கப்பட்டனர். சபரிமலை கோயில் முற்றிலும் நம்பூதிரி பாண்டியர்கள் மற்றும் தெலுங்கு பிராமணர்களாகிய தாழமண் மடம் தந்திரி குடும்பத்தின் கீழ் வந்தது. சபரிமலை கோவிலின் தந்திரி பதவி கி.மு 100ல் பரசுராம மகரிஷியில் இருந்து தங்களுக்கு கிடைத்ததாக தாழமண் மடம் தந்திரிகள் இப்போது கூறுகிறார்கள்.

    அதாவது ஐயப்பன் பிறப்பதற்கு 1700 ஆண்டுகளுக்கு முன்பே தாழமண் தந்திரிகள் சபரிமலை கோவிலின் பூசாரிகளாக இருந்தனர் என்பதாகும்.

    பாண்டிய வம்சத்தின் திராவிட வேர்கள்

    அசல் பாண்டியர்கள் திராவிட தமிழ் வில்லவர் ஆட்சியாளர்கள். வில்லவர் மன்னர்களை வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் குலங்கள் ஆதரித்தன. பணிக்கர்களும் ஏனாதி தளபதிகளும் பாண்டியப் படைகளை வழிநடத்தினர்.

    பாண்டியர்கள் வேடம் போடும் பார்கவகுலத்தைச் சேர்ந்த நம்பூதிரி பாண்டிய வம்சத்தினர் திராவிட வில்லவர்களோ தமிழர்களோ அல்ல. நம்பூதிரி பாண்டியர்கள் இன ரீதியாக பந்தளம் பாண்டிய வம்சத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல.

    துளு-நேபாளிய படையெடுப்பாளர்கள்

    தமிழ் வில்லவர்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து கேரளா மற்றும் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய வம்சங்களை நிறுவினர். தமிழ் அரசுகளின் எதிரிகளாக இருந்த துளு மன்னர்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் கூட்டு வைத்தனர்.12 ஆம் நூற்றாண்டில் பெரும் கடல் சக்தியாக இருந்த அரேபியர்கள் மலபாரில் ஒரு பெரிய குடியேற்றத்தை நிறுவ விரும்பினர்.

    துளு மன்னர்கள் அஹிச்சத்திரத்தில் இருந்து வேர்களைக் கொண்ட நேபாள நாயர்களின் இராணுவத்தால் பாதுகாக்கப்பட்டனர். நம்பூதிரிகளும் அஹிச்சத்திரத்தில் வேர்களைக் கொண்ட துளு பிராமணர் ஆவர், அவர்கள் கிபி 345 இல் கடம்ப மன்னர் மயூர வர்மாவின் ஆட்சியின் போது கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தனர்.

    கி.பி 1120 இல் பாணப்பெருமாள் (பானுவிக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு படையெடுப்பாளர் அரேபிய ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் 350000 எண்ணிக்கையிலான நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்து மலபாரை (காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்கள்) ஆக்கிரமித்தார், அங்கு அரேபியர்கள் குடியேறினர்.

    கி.பி 1120 துளு படையெடுப்பிற்குப் பிறகு, நேபாள வம்சாவளியைக் கொண்ட நாயர்களும் நம்பூதிரிகளும் வடக்கு கேரளாவில் தோன்றினர். பல நாயர்கள் வெள்ளை நிறத்தைக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் நேபாள வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மஞ்சள் நிறத்தின் சாயையும் மற்றும் சற்று மங்கோலிய முக அம்சங்களுடனும் இருந்தனர். நாயர்களும் நம்பூதிரிகளும் தங்களைச் சவர்ணர் என்று அழைத்தனர். நாயர்களும் நம்பூதிரிகளும் சேர மற்றும் பாண்டிய அரசுகளின் எதிரிகளாக இருந்த துளு-நேபாள மக்கள்.

    ReplyDelete
  20. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 இல் டெல்லி சுல்தானகத்திலிருந்து படையெடுப்பாளராக இருந்த மாலிக் காபூருடனான போரில் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு அனைத்து தமிழ் அரசுகளும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் டெல்லி ராணுவத்தால் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டனர். மலபாரின் துளு படையெடுப்பாளர்கள் அதாவது சாமந்தர், நாயர் மற்றும் நம்பூதிரிகளுக்கு டெல்லி சுல்தானியம் மற்றும் மாலிக் காஃபூர் ஆகியோர் கேரளாவின் ஆதிக்கத்தை அளித்தனர்.

    1335 ஆம் ஆண்டு கேரளா முழுவதும் துளு சாமந்தர்கள் மற்றும் நம்பூதிரிகளால் துளு-நேபாள தாய்வழி அரசுகள் நிறுவப்பட்டன. துளு-நேபாளத் தாய்வழி சவர்ண வம்சங்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களால் ஆதரிக்கப்பட்டன.

    முந்தைய பிராமணர்கள்

    பிற்கால சேர வம்ச காலத்தில் (கி.பி. 800 முதல் கி.பி. 1120 வரை) பிராமணர்கள் பட்டர், பட்டாரர், பட்டாரகர், பட்டாரியர், பழாரர், சாத்திரர், நம்பி, உவச்சர் போன்ற பெயர்களால் அறியப்பட்டனர். கி.பி.1335க்கு முந்தைய தமிழ்ப் பதிவுகள் எதிலும் நம்பூதிரிகள் குறிப்பிடப்படவில்லை.

    1310 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு முந்தைய தமிழ் பிராமணர்கள் அனைவரும் மர்மமான முறையில் காணாமல் போனார்கள்.

    பரசுராமர் கேரளாவின் மீது தங்களுக்கு அதிகாரம் அளித்ததாக நம்பூதிரிகள் கூறுகின்றனர். உண்மையில் 1310 ஆம் ஆண்டு துளுவ பிராமண நம்பூதிரிகளுக்கும் துளு சாமந்தர்களுக்கும் மாலிக் காஃபூரால்தான் கேரளாவின் மேலாதிக்கம் வழங்கப்பட்டது.

    வில்லவர்களின் வீழ்ச்சி

    இது கேரளாவில் திராவிட தமிழ் வில்லவர் வம்சங்களான சேர மற்றும் பாண்டிய வம்சங்களை அடக்கப்படுவதற்கு வழிவகுத்தது. பெரும்பாலான திராவிட மலையாளிகள் ஆரிய-நாக படையெடுப்பாளர்களால் அவர்ணர் என்று முத்திரை குத்தப்பட்டனர். நம்பூதிரிகள் துளு-நேபாள பிராமணர்கள், அவர்கள் பாண்டிய வம்சத்தின் பரம எதிரிகளாக இருந்தனர்.

    நம்பூதிரி பாண்டிய வம்சம்

    தற்போதைய பந்தளம் நம்பூதிரி பாண்டியன் வம்சம் ஆரிய பிராமண பார்கவ குலத்தைச் சேர்ந்தது, அவர்கள் உபநயனத்தை நடத்துபவர்கள், சைவ உணவு உண்பவர்கள், தமிழ் ஒருபோதும் பேசாதவர்கள்.

    சபரிமலை கோயிலும் பந்தளம் பாண்டிய ராஜ்ஜியமும் திராவிட வில்லவர் மக்களுக்கு சொந்தமானது ஆனால் அவர்களின் பாரம்பரியம் இப்போது புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    தீ விபத்து

    1950ல் சபரிமலை கோவிலில் மீண்டும் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அய்யப்பன் சிலை தீயில் எரிந்து சேதமானது.

    புதிய அய்யப்பன் சிலை

    1936-ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த சர் பொன்னம்பல தியாக ராஜன் என்கிற பி.டி.ராஜன், பழமையான ஐயப்பன் சிலைக்குப் பதிலாக, தற்போதைய பஞ்சலோக ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலுக்கு பரிசாக அளித்தார். ஆனால், சபரிமலை கோவிலுக்கு திராவிடத் தொடர்பை யாரும் விரும்பாததால், இது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது

    ஐயப்பன் புராணத்தின் காலம்

    சுவாமி ஐயப்பன் புராணத்தின் காலம் 1623 இல் திருமலை நாயக்கரின் படையெடுப்பில் தொடங்கி கி.பி 1647 இல் புனித செபஸ்தியாரின் பளிங்கு சிலை நிறுவப்பட்டதில் முடிவடைகிறது.

    ReplyDelete
  21. கடைசி சேர, சோழ பாண்டிய மன்னர்கள்

    வெங்கல தேவன்

    வீரசேகர சோழன் மகன் வெண்கலதேவனும் மகளும் போர்த்துகீசியரின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கைக்கு தப்பிச் சென்றனர்.
    பல ஆண்டுகளுக்குப் பிறகு போர்த்துகீசியர்களின் எதிர்ப்பைச் சந்தித்த அவர் இலங்கையிலிருந்து திரும்பி வந்து கன்னியாகுமரி அருகே வெங்கலராயன் கோட்டை என்று ஒரு கோட்டையைக் கட்டினார்.
    ஆனால் வேணாட்டின் துளு-ஆய் மன்னராக இருக்க்கூடிய ஒரு உள்ளூர் மன்னன் வெங்கல ராயனின் மகளை மணக்க விரும்பினான். வெங்கல ராயனிற்கு அவனது திருமண விருப்பம் பிடிக்காமல் குரும்பூர் சென்றார். குரும்பூரிலும் நளன் என்ற குட்டி அரசன் வெங்கல ராயனின் மகளை மணக்க விரும்பினான். வெங்கல ராயன் தனது மகளைக் கொன்ற பிறகு தற்கொலை செய்து கொண்டார். வெங்கல ராயனின் வழித்தோன்றல்கள் நாடார்களின் துணைக்குழுவாகிய வெங்கல ராயன் கூட்டம் என்று அழைக்கப்படுகின்றன.

    ReplyDelete